மனித மூளையில் பயம் தொடர்பான நினைவுகள் ஆழமாக பதிய காரணம் என்ன?

இப்படி மூளையில் ஏற்படும் மாற்றம், மூளையில் உணர்வுகள் கையாளப்படும் இடத்தில் மின்சாரம் வெளிப்படும் விதத்தை மாற்றுகிறது. இந்த மாற்றமே ஓய்வு நிலையில் இருக்கும் மூளையை முழு விழிப்புநிலைக்குத் தள்ளுகிறது.
human brain
human braintwitter

பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கார் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். 14 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் ரத்தமும் சதையும் சாலையில் சிதறிக் கிடந்த நினைவு ஏன் அறிவில் ஆழப் பதிந்து கிடக்கிறது.

சிறு வயதில் உடன் பிறந்த சகோதரன் அல்லது சகோதரியோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த போது, திடீரென அவர் மயங்கி விழுந்த சம்பவம் ஏன் மற்ற குழந்தைகளின் அறிவில் இப்போதும் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

இப்படி என்றோ, எப்போதோ, பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பயம் தொடர்பான சம்பவங்கள் மனிதர்களின் மூளையில் ஆழமாகப் பதிவது ஏன்?

Human Brain
Human Brainpixabay

மகிழ்ச்சிகரமான அல்லது குதூகலமான சம்பவங்களை விட அதிர்ச்சிகரமான அல்லது பயமுறுத்தக் கூடிய சம்பவங்கள் அதிக துல்லியமாக மூளையில் பதிவாவது ஏன்? என்கிற கேள்விகளுக்கு டுலன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் & பொறியியல் பள்ளி மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி இதற்கு சில விடைகளைக் கண்டுபிடித்துள்ளன.

மனித மூளையின் உணர்வுகளின் மத்தியப் புள்ளியாகக் கூறப்படும் அமைக்தலா (Amygdala) என்கிற பகுதி தான் பயம் போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களைக் கையாள்கிறது. அப்பகுதியில் நினைவுகள் சேகரிக்கப்படுவதை மேலே குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, இப்படி உணர்வுப்பூர்வமான விஷயங்கள் பதிவாவதற்கு ஒரு கோட்பாட்டைக் கூறுகின்றனர்.

மனிதர்களுக்கு பயம் ஏற்பட்டால், மூளை நொரேபைன்ஃப்ரைன் (norepinephrine) என்கிற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை வெளியிடும். அந்த நியூரான்கள் பயத்தைக் கையாள்கிறது. இந்த செயல்முறையின் போது மனித மூளையில் இருந்து மின்சாரம் வெளிப்படும் விதத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

human brain
சாவதற்கு முன்பு நம் மூளை என்ன நினைக்கும் தெரியுமா? - புதிய ஆய்வு

இப்படி மனித மூளைக்குள் மின்சாரம் வெளிப்படுவதால், ஒட்டுமொத்த மனித மூளையும் ஓய்வாக இருக்கும் நிலையில் இருந்து முழு விழிப்பு நிலைக்குச் செல்கின்றன. ஆகையால் தான் பயம் அல்லது அதிர்ச்சிகரமான விஷயங்கள் மனித முளையில் ஆழமாகப் பதிகின்றன.

இதை ஒரு உதாரணத்தோடு விளக்குகிறார் டுலன் செல் & மாலிகுலர் பயாலஜி பேராசிரியர் ஜெஃப்ரி டாஸ்கர். ஒரு ஆயுதமேந்திய நபர் உங்களை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக் கொண்டு பொருட்களை எல்லாம் திருடும் போது, உங்கள் மூளை நொரேபைன்ஃப்ரைன் என்கிற நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை (இதை ஹார்மோன் என்றும் கூறுகிறார்கள்) வெளியிடும். இதே காலகட்டத்தில்தான் அட்ரினலினும் அதிகம் சுரக்கும் என்கிறார் அவர்.

Human Brain
Human Brain Pexels

இப்படி மூளையில் ஏற்படும் மாற்றம், மூளையில் உணர்வுகள் கையாளப்படும் இடத்தில் மின்சாரம் வெளிப்படும் விதத்தை மாற்றுகிறது. இந்த மாற்றமே ஓய்வு நிலையில் இருக்கும் மூளையை முழு விழிப்புநிலைக்குத் தள்ளுகிறது.

மூளை முழு விழிப்புநிலையில் இருக்கும் போது பயம் அல்லது அதிர்ச்சிகரமான விஷயங்கள் மூளையில் ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவாகின்றன.

ஒருவரின் வாழ்கையில் நடந்த கோரமான அல்லது மனதை மிகக் கடுமையாகப் பாதிக்கும் சம்பவங்களும் இதே போலப் பதிவாவதாக இந்தியா டைம்ஸ் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் தான் மனிதர்கள் பதற்றப்படும்போதோ, பயப்படும்போதோ தண்ணீர் குடிக்குமாறும், அமைதிப்படுத்திக் கொள்ளுமாறும் சொல்கிறார்களோ?

human brain
மனிதர்கள் இயற்கையாகவே சோம்பேறிகளா? - ஆய்வு கூறும் அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com