Thrissur Pooram: திருவிழாவில் யானை வெறி கொண்டதால் பரபரப்பு

பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கிய நிலையில், திடீரென யானை ஒன்று வெறிகொண்டு ஓட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பூரம் திருவிழா
பூரம் திருவிழாTwitter

ஆண்டுதோறும் கேரள கோவில்களில் அனுசரிக்கப்படும் பூரம் திருவிழா, வடக்கு நாதர் கோவிலில் நடைபெறுவது மிக விசேஷமாக இருக்கும். உலக பிரசித்திபெற்ற இத்திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, குடை மாற்றம் வான வேடிக்கைகள், பஞ்சவாத்திய மேள தாளங்களோடு நடைபெறும்.

இன்று காலை, சிவக்குமார் என்று பெயர் கொண்ட யானை நெய்த்தலைக்காவு பகவதி அம்மன் உருவச்சிலை ஏந்தி, வடக்குனாதர் கோவிலின் மேற்கு நடை வழியாக கோவிலுக்குள் புகுந்து, தெற்கு கோபுர நடை வழியே வெளி வந்து மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தி, திருவிழா துவங்கியதாக அறிவிக்கப்பட்டது.

Thrissur Pooram
Thrissur Pooram Twitter

இந்நிலையில், இன்று காலை சுமார் 7 மணியளவில், வடக்குனாதன் கோவிலில் ஸ்ரீமூலஸ்தானம் அருகில் பூரத்திற்கு வரவழைக்கப்பட்ட ஒரு யானை திடீரென்று வெறிகொண்டு ஓட முயன்றதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. யானை பாகன் யானையை விட்டுவிட்டு கழிவறை சென்றிருந்த நேரத்தில் யானை ஓட முயன்றதால் அமைதியற்ற நிலை உருவானது.

பாகன் விரைந்து வந்து அதை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார் என்றும், யானை சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்ததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்து கண்டுகளிக்கும் இத்திருவிழா இன்று துவங்கி ஏழு தினங்கள் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பூரம் திருவிழா
அட்சயதிரிதியை சிறப்புகள்: செல்வமும் புண்ணியமும் பண்மடங்கு பெருகும் - பலராமர் ஜெயந்தி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com