அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: போலீசார் மீது திடீரென சீறிப்பாய்ந்த காளையால் பரபரப்பு!

மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீசார் மீது திடீரென ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாய்ந்தது. இதில் அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:  போலீசார் மீது திடீரென சீறிப்பாய்ந்த காளையால் பரபரப்பு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: போலீசார் மீது திடீரென சீறிப்பாய்ந்த காளையால் பரபரப்பு!Twitter

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் காளைகளை அவிழ்த்து விட, காளையர்கள், அதன் திமிலை அடக்கி பரிசுகளை வென்று வருகின்றனர்.

போட்டியில் ஜெயிக்கும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்க காசுகள், மோட்டார் சைக்கிள், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த போட்டியை பார்வையாளர்கள் கண்டு ஆர்பரித்து வருகின்றனர். போட்டியை ஒழுங்குபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீசார் மீது திடீரென ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாய்ந்தது.

இதில் நிலை தடுமாறி போலீசார் மைதானத்துக்குள் கீழே விழுந்தார். இதில் அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவ குழுவினரிடம் அழைத்துச் சென்றனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:  போலீசார் மீது திடீரென சீறிப்பாய்ந்த காளையால் பரபரப்பு!
அலங்காநல்லூர் : உதயநிதியுடன் சூரி, அருண்விஜய் - நட்சத்திரங்களால் மெருகேறும் ஜல்லிக்கட்டு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com