மிஸ் தமிழ்நாடு அழகியை காதலித்து ஏமாற்றிய 56 வயது காவலர் ஆண்ட்ரூஸ்

அந்தப் பெண்ணிடமிருந்து சொத்து பத்திரங்கள், நகைகள், வங்கிக் கணக்கிலிருந்த பணம் என ஒவ்வொன்றாகச் சாமார்த்தியமாக ஆண்ட்ரூஸ்ஸ் கைப்பற்றிக் கொண்டதாகவும், வாடகை வீடு ஒன்றைப் பார்த்து அந்த பெண்ணை தங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.____
காவலர் ஆண்ட்ரூஸ்

காவலர் ஆண்ட்ரூஸ்

Twitter

தமிழ்நாடு காவலர் ஒருவர் வயதைக் குறைத்துக்காட்டி, தன்னை ஏமாற்றியுள்ளதாக மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற பெண் குற்றம் சாட்டியுள்ளார். காவலர் மீது காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த அந்தப் பெண், சமூக சேவையில் ஈடுபட்டிருந்த தருணத்தில் காவல்துறையில் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிவதாக கூறி ஆண்ட்ரூஸ் கால்டுவெல் என்பவர் அறிமுகமாகியுள்ளார். சமூக ஆர்வலரான இவர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள படூர் ஊராட்சியில் வீடு ஒன்றை வங்கி மூலம் வாங்கியுள்ளார். வாங்கிய பிறகுதான் அந்த வீடு மீது ஏற்கனவே வழக்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது எனத் தெரியவந்துள்ளது.

பின்னர் தன்னை ஏமாற்றிய வங்கி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர அந்தப் பெண் முடிவு செய்த போது, சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

<div class="paragraphs"><p>பெண்</p></div>

பெண்

Twitter

வசதி படைத்த அந்த பெண்ணின் பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் தாய் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளனர்.


இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த பெண்ணிடம் உங்கள் வீட்டிற்குள் சாத்தான் புகுந்து இருப்பதாகவும் அதனால்தான் இழப்பு ஏற்பட்டதாகக் கூறிய ஆண்ட்ரூஸ் அதற்கு சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும் எனப் போதகர் ஒருவரையும், தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோரை அங்கு அழைத்துச் சென்றுள்ளார். சாத்தானை விரட்டுவதற்கு 40 நாட்கள் வரை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறி சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.


ஆன்ட்ரூஸ் தொடர்ந்து உதவிகள் செய்து வந்ததால், ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்து லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். பின்னர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் அவரது வீட்டில் உள்ளவர்களிடம் மிஸ் தமிழ்நாடு அழகியை விரும்புவதாகக் கூறியுள்ளார். பின்னர் அவரது வீட்டார்களும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறிள்ளனர்.

<div class="paragraphs"><p>மன உளைச்சலில் பெண்</p></div>

மன உளைச்சலில் பெண்

Twitter

ஆண்ட்ரூஸின் வயது குறித்து அந்த பெண் கேட்டதற்கு அவரது வீட்டார்கள் 42 வயது தான் ஆகிறது அதிக நேரம் வெயிலில் பணிபுரிவதால் அப்படித் தெரிகிறது என்று கூறி சமாளித்திருக்கின்றனர். அந்தப் பெண்ணிடமிருந்து சொத்து பத்திரங்கள், நகைகள், வங்கிக் கணக்கிலிருந்த பணம் என ஒவ்வொன்றாகச் சாமார்த்தியமாக ஆண்ட்ரூஸ்ஸ் கைப்பற்றிக் கொண்டதாகவும், வாடகை வீடு ஒன்றைப் பார்த்து அந்த பெண்ணை தங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.


அந்த வீட்டிலிருந்தபோது சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ்சின் ஆதார் கார்டு மிஸ் தமிழ்நாடு அழகியிடம் கிடைத்துள்ளது. அதில் ஆண்ட்ரூஸ் ஆலந்தூர் காவல் குடியிருப்பில் வசித்து வருவதும் அவருடைய உண்மையான வயது ஐம்பத்தி ஆறு (56) என்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்த்த அந்தப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் வசிக்கும் பகுதிக்குச் சென்று விசாரித்தபோது அவர் உதவி ஆய்வாளர் இல்லை என்பதும் அவர் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆக பணிபுரிவதும் தெரியவந்துள்ளது.

<div class="paragraphs"><p>காவலர் ஆண்ட்ரூஸ்</p></div>
விஷ்ணு விஷால் Vs சூரி : 2.7 கோடி ரூபாய் மோசடி வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்

தன்னிடம் வயது குறைவு என்று கூறி நம்பவைத்து ஏமாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது கடந்த வருடம் நவம்பர் மாதம் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரிடம் விசாரணையைத் துவக்கினர். விசாரணையில் சிறப்பு உதவி ஆய்வாளரான ஆண்ட்ரூஸ் கால்டுவெல் வயதைக் குறைத்து அந்த பெண்ணை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்ததின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர்.


பள்ளிக்கரணையில் மிஸ் தமிழ்நாடு அழகி பட்டம் வென்ற பெண்ணிடம் இளைஞராக நடித்து ஏமாற்றிய 56 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் மீது கடந்த மாதம் 27ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.வழக்குப் பதிவு செய்ததோடு நிறுத்திக்கொண்ட பள்ளிகாரணை காவல்துறையினர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் காவல்துறை உயரதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீது புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றனர்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com