கோவை: பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு - என்ன காரணம்?

பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு - என்ன காரணம்?
கோவை: பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு - என்ன காரணம்?Twitter

கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் பஸ் ஓட்டுவது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, ஷர்மிளா பிரபலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பெண் நடத்துனருக்கு பேருந்தின் உரிமையாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் அவர் தனது வேலையை ராஜினாமா செய்தார்.

தற்போது சொந்தமாக டாக்ஸி ஓட்டி வருகிறார். இந்த நிலையில் பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சத்திரோடு சிக்னல் சந்திப்பில் ஷர்மிளா போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதனை கேட்ட எஸ்.ஐ. ராஜேஸ்வரியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 506(ஐ), 509, 66சி தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கோவை: பிரபல பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு - என்ன காரணம்?
ஷர்மிளா : கோவை பெண் ஓட்டுநர் பணி நீக்கம் - கனிமொழியின் விளக்கம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com