அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை விதித்து ஐகோர்ட் உத்தரவு!
அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை விதித்து ஐகோர்ட் உத்தரவு!Twitter

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் உத்தரவு!

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Published on

வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடி கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமான அளவு சொத்து குவித்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்களை இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கினார்.

அதன்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com