Mandous Cyclone : புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் எத்தனை? அதன் அர்த்தம் என்ன?

மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவும், கடலுக்குள் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்பதற்காகவும் இந்த புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்படுகிறது.
Mandous Cyclone
Mandous CycloneTwitter
Published on

தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது.

மாண்டோஸ் புயல் தமிழகத்தை நெருங்கிவரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் லேசான மழை தொடங்கியுள்ளது.

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 3 துறைமுகங்களில் இரண்டு மற்றும் நான்கு புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

எண்ணூர், தூத்துக்குடி, பாம்பன் உள்ளிட்ட ஆறு துறைமுகங்களில் இரண்டாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயலின் அபாயத்தை பற்றியும், அதன் வேகம் பற்றியும் மக்களுக்குத் தெரிவிப்பதற்காக துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகிறது.

மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காகவும், கடலுக்குள் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்பதற்காகவும் இந்த புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்படுகிறது.

புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் மொத்தம் 11 வகைகளாக ஏற்றப்படுகிறது.

ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு

ஒரு புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கிறது.

இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு

புயல் ஒன்று உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மூன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு

திடீர் காற்றோடு மழை பெய்யும் நிலை என துறைமுகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும். அதனால் துறைமுகத்தில் இருக்கும் படகுகள், மற்றும் கப்பல்கள் பாதுகாப்புடன் நிறுத்தப்படும்.

Mandous Cyclone
வைர மழை பொழியும் இந்த இடம் குறித்து தெரியுமா? - விஞ்ஞானிகள் சொல்லும் ஆச்சர்ய தகவல்

நான்காம் எண் எச்சரிக்கைக் கூண்டு

துறைமுகம் மற்றும் கடல் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகும்.

ஐந்தாம் எண் எச்சரிக்கைக் கூண்டு

துறைமுகத்துக்கு இடது புறமாக புயல் கரையைக் கடக்கும் என குறிக்கிறது.

ஆறாம் எண் எச்சரிக்கைக் கூண்டு

துறைமுகத்துக்கு வலது புறமாக புயல் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்கும்.

ஏழாம் எண் எச்சரிக்கை கூண்டு

துறைமுகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஆபத்துகள் அதிகம் என்பதைக் குறிக்கும்.

எட்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு

தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்.

ஒன்பதாம் எண் எச்சரிக்கை

அதிதீவிர புயலாக உருவெடுத்து கூண்டு துறைமுகத்துக்கு வலது புறமாக புயல் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்கிறது.

பத்தாம் எண் எச்சரிக்கை கூண்டு

துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு அபாய நிலை என்று எச்சரிக்கும்.

பதினொன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு

புயலானது பேரழிவினை உண்டாக்கும் என்பதைக் குறிக்கும்.

Mandous Cyclone
இரும்பு மழை பெய்யும் அதிசய கிரகம் : மனிதர்கள் வாழ முடியுமா? அக்கோளின் வெப்பநிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com