"மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை காணவில்லை"- காவல் நிலையத்தில் புகார் செய்த திமுகவினர்

மதுரைக்கு சுற்றுப்பயணம் வந்த ஜேபி நட்டா, "மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவடைந்து விட்டது" எனப் பேசியிருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளானது.
"மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை காணவில்லை"- காவல் நிலையத்தில் புகார் செய்த திமுகவினர்
"மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை காணவில்லை"- காவல் நிலையத்தில் புகார் செய்த திமுகவினர்Twitter
Published on

மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்பது கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் முக்கியப் பிரச்சாரமாக இருந்தது. எய்ம்ஸ் செங்கல்லை திமுக தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தினர் என்றே கூறலாம். இப்போது பாஜக தலைவர் ஜேபி நட்டா பேச்சால் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது மதுரை எய்ம்ஸ்.

மதுரைக்கு சுற்றுப்பயணம் வந்த ஜேபி நட்டா, "மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவடைந்து விட்டது" எனப் பேசியிருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளானது.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் எய்ம்ஸ் அமைக்க இருந்த இடத்தைப் பார்வையிட்டு அது வானம் பார்த்த பூமியாக இருப்பதனை விமர்சித்தனர்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வைரலானது.

இதன் பிறகு, "பாஜக தலைவர் நட்டா மதுரை எய்ம்ஸ் தொடர்பான தொடக்கநிலை பணிகள் தான் 95% நிறைவடைந்திருக்கிறது. திமுகவினர் நட்டா பேசியதை தவறாக புரிந்துகொண்டு விமர்சித்து வருகின்றனர்" என பாஜகவினர் கூறினர்.

"மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை காணவில்லை"- காவல் நிலையத்தில் புகார் செய்த திமுகவினர்
பிடிஆர் குறித்து ட்விட்டரில் அவதூறு : வீடியோ வெளியிட்ட வெள்ளைக்காரர் - உண்மை என்ன?

எனினும் இணையத்தில் கலாய்கள் குறையவில்லை. செய்தியாளர்கள் ஜேபி நட்டாவிடமே இது குறித்து கேள்வி எழுப்பியபோது, "எய்ம்ஸ் குறித்து அண்ணாமலையிடம் கேளுங்கள் என கைக்காட்டிச் சென்றுவிட்டார் நட்டா.

எய்ம்ஸ் பணிகள் கிடப்பில் இருப்பதை நூதனமாக சுட்டிக்காட்டும் வகையில் "மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் கட்டிடத்தைக் காணவில்லை" என ஆண்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர் திமுகவினர்.

இது வடிவேலுவின் கிணத்தைக் காணோம் காமடி போல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த அரசியல் நையாண்டிகள் ஒருபக்கம் இருக்க, 2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் இன்றும் கட்டுமானப் பணிகள் கூட தொடங்கப்படாமல் இருப்பது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

"மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை காணவில்லை"- காவல் நிலையத்தில் புகார் செய்த திமுகவினர்
மீம் போட்ட நேரத்துக்கு நாலு காசு சேர்த்து இருக்கலாம்: வைரலாகும் ஆனந்த் சீனிவாசன் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com