
சென்னையின் அண்ணா நகர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.
துருக்கி, சிரியா நாடுகளில் இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 47,000 பேர் பலியாகியுள்ளனர். இது வரலாற்றில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும். ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியிருந்தது.
துருக்கியை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என புவியியல் ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். இந்தியாவின் சில பகுதிகளில் அருணாச்சல பிரதேசம், காஷ்மீர், சிக்கீம், உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
உத்தராகாண்டில் எந்த நேரத்திலும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என தேசிய புவி இயற்பியல் ஆய்வு கழகத்தின் தலைமை அதிகாரி பூர்ணசந்திர ராவ் குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில், சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அண்ணா சாலை அருகே உள்ள ஒயிட்ஸ் ரோட்டில் அமைந்திருக்கும் யூனியன் வங்கி மற்றும் இரண்டு கட்டிடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அண்ணா நகரிலும் சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், கட்டிடங்களில் இருந்த ஊழியர்கள் சாலையில் தஞ்சம் புகுந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust