ஈரோடு: ஊட்டிவிட்டால் உணவு இலவசம்! மகளிர் தின சலுகை எங்கே?

ஈரோட்டில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, மாமியார், மருமகள் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட்டால், சாப்பாடு இலவசம் என உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.
ஈரோடு: ஊட்டிவிட்டால் உணவு இலவசம்! மகளிர் தின சலுகை எங்கே?
ஈரோடு: ஊட்டிவிட்டால் உணவு இலவசம்! மகளிர் தின சலுகை எங்கே?Twitter

சர்வதேச மகளிர் தினம் ( IWD ) ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

பாலின பாகுபாடு சம்பந்தமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை அனைவரது கவனத்திலும் கொண்டு வருவதே இந்நாளின் நோக்கம்.

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, மாமியார், மருமகள் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிவிட்டால், சாப்பாடு இலவசம் என உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

மார்ச் 6 முதல் 18ம் தேதி வரை இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான மாமியார், மருமகள்கள் பங்கேற்று அன்பை பரிமாறி வருகின்றனர்.

ஈரோடு: ஊட்டிவிட்டால் உணவு இலவசம்! மகளிர் தின சலுகை எங்கே?
அரசின் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com