சிறையிலிருந்து வெளியானார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் - மாலை அணிவித்து வரவேற்ற அதிமுகவினர்

மாலை 6.30 மணி வரை அமைச்சர் ஜெயக்குமார் பிணை ஆணையை சிறை அதிகாரிகளிடம் வழங்காத காரணத்தால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று விடுதலை செய்யப்படவில்லை
Jeyakumar

Jeyakumar

Twitter

Published on

கடந்த 21ம் தேதி முதல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியானார்.

உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக பிரமுகரை தாக்கியது, அத்து மீறி சாலை மறியலில் ஈடுபட்டது ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு இரு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்தது. ஆனால், தொடர்ந்து மூன்றாவதாக போடப்பட்ட சென்னை, துரைபாக்கத்தில் 8 கிரவுண்ட் நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கிடைக்க தாமதமானதால் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

<div class="paragraphs"><p>Jeyakumar</p></div>
ஜெயக்குமார் கைது : பரபரப்பான CCTV காட்சிகள்

இந்நிலையில் நேற்று மூன்றாவது வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதனால் நேற்றே ஜெயக்குமார் வெளியாவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அதிமுகவின் தொண்டர்கள் சிறை வாசல் முன்பு கூடி வந்த நிலையில் சிறைத்துறை விதிப்படி மாலை 6 மணிக்கு மேலாக கைதிகளை விடுவிக்க கூடாது என்ற விதி உள்ள நிலையில், மாலை 6.30 மணி வரை அமைச்சர் ஜெயக்குமார் பிணை ஆணையை சிறை அதிகாரிகளிடம் வழங்காத காரணத்தால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று விடுதலை செய்யப்படவில்லை. இதனால் 4 மணி நேரமாக முன்னாள் அமைச்சரை வரவேற்க காத்திருந்த அதிமுக தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை ஏராளமான அதிமுக தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.

<div class="paragraphs"><p>Jeyakumar</p></div>
ஜெயக்குமார் : சசிகலாவை எதிர்க்கும் துணிவு, தீராத விளையாட்டுப் பிள்ளை - Life of Jayakumar

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com