கொடைக்கானல் மூணாறை இணைக்கும் Escape Road - ஆங்கிலேயர் அமைத்த இந்த வழியில் செல்ல ஏன் தடை?

ஆங்கிலேயர்கள், பெரிஜாம் ஏரி வழியாக டாப் ஸ்டேஷனுக்கு தப்பித்து ஓட திட்டமிட்டனர். அங்கிருந்து மூணாறு சென்று மூணாரிலிருந்து கப்பல் வழியாக கொச்சி செல்வது தான் இவர்களின் திட்டம்.
கொடைக்கானல் மூணாறை இணைக்கும் Escape Road - ஆங்கிலேயர் அமைத்த இந்த வழியில் செல்ல ஏன் தடை?
கொடைக்கானல் மூணாறை இணைக்கும் Escape Road - ஆங்கிலேயர் அமைத்த இந்த வழியில் செல்ல ஏன் தடை? twitter

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்த காலத்தில், அவர்களின் பல அரசியல், பொருளாதார தேவைகளுக்கு நம் நாட்டினை பயன்படுத்திக்கொண்டனர்.

குறிப்பாக உலகப்போர் சமயங்களில்.

அப்படி இரண்டாம் உலகபோர் சமயத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட பாதை ஒன்று இருக்கிறது.

இதனை எஸ்கேப் ரோட் என்று அழைக்கின்றனர். இதன் வரலாறு என்ன? எந்த இடங்களை இந்த வழித்தடம் இணைக்கிறது, இதன் தற்போதைய நிலை என்ன? இந்த பதிவில் பார்க்கலாம்!

இந்த எஸ்கேப் ரோட் என்பது தமிழ்நாட்டை கேரளாவுடன் இணைக்கிறது. மலைகளின் அரசி கொடைக்கானலில் இருந்து கேரளாவின் மூணாறு என்ற இடத்தை இந்த வழித்தடம் மூலமாக சென்றடையலாம்.

சுமார் மூன்று தசாபதங்களுக்கு முன்பு இந்த வழித்தடம் மூடப்பட்டது. மக்கள் இந்த வழியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

1864ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது இதன் வரலாறு.

ஆங்கிலேய அரசு தனது இராணுவ படையணியை அமைக்க சரியான ஓரிடத்தை தேடிக் கொண்டிருந்தது. அப்போது கர்னல் டக்லஸ் ஹேமில்டன் என்ற இராணுவ அதிகாரி பழனி மலையில் இருக்கும் பெரிஜம் என்ற இடத்தை பற்றி அறிகிறார். கொடைக்கானல் என்றால் உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியலாம்.

இந்த கொடைக்கானல் பகுதி இராணுவ படையாணிகளை தங்க வைக்க சிறந்த இடமாக இருக்கும் என்று கர்னல் தெரிவிக்க, பலரும் குடும்பத்துடன் இவ்விடத்திற்கு குடிபெயர்ந்தனர்.

இங்கு அமைந்திருந்த பெரிஜாம் ஏரி மற்றும் குளிரான வெப்பநிலை, அவர்களை ஈர்த்தது.

ஃபோர்ட் ஹேமில்டன் (ஹேமில்டன் கோட்டை) என்ற பெயரில், இராணுவ அதிகாரி டக்லஸ் ஹேமில்டனின் பெயரில் ஒரு பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த ஹேமில்டன் கோட்டை உண்மையில் ஒரு குடிசை தான். இதனருகே 1867ல் ஒரு போலியான ஏரியையும் உருவாக்கினர். இதற்கு அப்போதைய மதுரை ஆட்சியர், வீர் லெவின் தான் ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த பணத்தை வழங்கியிருந்ததாக வரலாறு கூறுகிறது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

அந்த சமயத்தில் எதிரிக் குழுவான பிரிட்டிஷ் இந்தியாவை ஆட்சி செய்து வந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருந்த நகரங்களில் ஒன்று தான் மெட்ராஸ்.

இதனால் ஜப்பான் மெட்ராஸ் மீது குண்டுகள் வீசியது.இதனால் பல குடும்பங்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேறு இடங்களுக்கு சென்றனர். அதில் சிலர் கொடைக்கானலுக்கும் வந்தனர்.

ஆங்கிலேயர்கள், பெரிஜாம் ஏரி வழியாக டாப் ஸ்டேஷனுக்கு தப்பித்து ஓட திட்டமிட்டனர். அங்கிருந்து மூணார் சென்று மூணாரிலிருந்து கப்பல் வழியாக கொச்சி செல்வது தான் இவர்களின் திட்டம்.

இந்த வழித்தடம் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது. இதனால் சாலையை பிரிட்டிஷ் அரசு சீரமைத்தது. தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த வழித்தடம் அமைக்கப்பட்டதால் இதனை எஸ்கேப் ரோட் என்று அழைத்தனர்.

கொடைக்கானலின் எல்லையில் அமைந்திருக்கும் பம்படும்சோழா தேசிய பூங்காவிற்கு டிரெக்கிங் வருபவர்கள் இந்த எஸ்கேப் ரோடை பயன்படுத்தலாம்.

ஆனால் அதுவும் குறைந்த தூரத்திற்கு மட்டும் தான். 1990களில் கேரளாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையில் ஏற்பட்ட இடப்பிரச்சினையில் இந்த வழியை பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது.

தற்போது டிரெக்கிங் செல்பவர்கள் 3 கிமீ தூரம் இந்த வழியாக செல்லலாம். அதன் பிறகு இந்த வழியை கடக்க அனுமதி இல்லை.

கிட்ட தட்ட முப்பது ஆண்டுகளாக இந்த தடை நீடித்து வருகிறது.

வழிநெடுக அரிய வகை பறவைகள், உயிரனங்களை காணலாம். அங்கிருந்து, பெரிஜாம் ஏரிக்கு செல்ல கொடைக்கானல் வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெறவேண்டும்.

ஆனால் இந்த பாதை மூடப்பட்டதில் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துவருபவர்கள் விவசாயிகள் தான். 

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com