Tasmac : தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு - மது பிரியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
Tasmac

Tasmac

Twitter

Published on

தமிழகத்தில் டாஸ்மாக்கில் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்கிறது.மற்றும் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாயிருக்கிறது.

இந்த விலையுயர்வின் மூலம் ஆண்டுக்கு 4396 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வரவு என்றும் கூடுதலாக தகவல் வெளியாயிருக்கிறது.பீர் வகை மதுபானத்தின் விலை உயர்வு மூலம் மட்டும் அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.1.76 கோடி கூடுதல் வருவாய் வர வாய்ப்பு உள்ளது.

<div class="paragraphs"><p>Tasmac</p></div>
Morning News Tamil : 'உக்ரைன் இருக்காது' - Putin எச்சரிக்கை - முக்கிய செய்திகள்

சென்னையில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மது விலக்கு ஆயத்தீர்வை துறையில் வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மது பானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

பீர் வகை மதுபானங்களின் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. குவாட்டர் ஒன்றிற்கு சாதாரண ரகங்கள் ரூ. 10-ம் மீடியம், உயர் ரகங்கள் ரூ.20-ம் விலை உயர்ந்துள்ளது. ஆப் பாட்டில் சாதாரண ரகங்கள் ரூ. 20-ம், மீடியம், உயர் ரகங்களுக்கு ரூ.40-ம் விலை உயர்ந்துள்ளது. புல் பாட்டில் சாதாரண ரக மதுபானங்களுக்கு ரூ. 40-ம், மீடியம் மற்றும் உயர் ரகங்களுக்கு ரூ. 80-ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com