அரசுப் பள்ளிக்கு மீண்டும் நிலத்தை தானமளித்த ஆயி அம்மாள்!

1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு கொடையாக அளித்த ஆயி அம்மாளை பெருமைப்படுத்தும் வகையில் குடியரசு நாள் விழாவில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
அரசுப் பள்ளிக்கு மீண்டும் நிலத்தை தானமளித்த ஆயி அம்மாள்!
அரசுப் பள்ளிக்கு மீண்டும் நிலத்தை தானமளித்த ஆயி அம்மாள்!Twitter

ஆயி பூரணம் அம்மாள், மீண்டும் 91 செண்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கியிருக்கிறார்.

மதுரையைச் சேர்ந்த ஆயி பூரணம். கனரா வங்கியில் பணியாற்றியவர். 31 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள் ஜனனிக்கு 1 வயதாக இருக்கும் போது, கணவர் உக்கிர பாண்டியன் விபத்தில் காலமானார்.

அதன்பிறகு தனது மகளை படிக்க வைத்து திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகளும் உயிரிழந்தார்.

இந்த நிலையில் தனது மகள் ஜனனியின் நினைவாக மதுரை கொடிக்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.

1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு கொடையாக அளித்த ஆயி அம்மாளை பெருமைப்படுத்தும் வகையில் குடியரசு நாள் விழாவில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஆயி பூரணம் அம்மாள், மீண்டும் 91 செண்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கியிருக்கிறார். அதன் மதிப்பு சுமார் ரூ3.5 கோடி என கூறப்படுகிறது.

அரசுப் பள்ளிக்கு மீண்டும் நிலத்தை தானமளித்த ஆயி அம்மாள்!
Tamilnadu: ₹634.99 கோடி மதிப்பில் BS 6 ரக பேருந்துகள் வாங்கும் அரசு - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com