ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் Spot

பனிச்சரிவு ஏரி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அழகிய பகுதியாகும். நகர்ப்புற காடுகளின் சலசலப்புகளிலிருந்து மறைந்திருக்கும் இந்த பனிச்சரிவு ஏரி நன்னீர் அமைப்பாக திகழ்கிறது.
ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் Spot
ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் SpotTwitter

நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓர் அழகான சுற்றுலா மலை வாசஸ்தல நகரம்தான் ஊட்டி.

இங்கு சீறிப்பாயும் அருவிகள், அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்க பல இடங்கள் உள்ளன.

அது மட்டுமில்லாமல் படகு சவாரி, மலையேற்றம் என சாகச பிரியர்களுக்கும் ஏற்ற இடமாக உள்ளது. ஆனால் ஊட்டியில் இன்னும் சில இடங்களும் உள்ளன. பெரிதும் அறியப்படாத ஒரு ஸ்பாட்டை பற்றி தான் இங்கு சொல்ல போகிறோம்.

பொதுவாக ஊட்டி என்றவுடன் பூங்காக்கள், மலர் கண்காட்சி, வியூபாண்ட் என்பது நினைவிற்கு வரும் அல்லது அந்த இடங்களை தான் நாம் கண்டு ரசித்திருப்போம். ஆனால் இயற்கையாகவே உருவாகியிருக்கும் பனிச்சரிவு குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நகர்ப்புற காடுகளின் சலசலப்புகளிலிருந்து மறைந்திருக்கும் இந்த பனிச்சரிவு ஏரி நன்னீர் அமைப்பாக திகழ்கிறது. இதனை அவலாஞ்சி ஏரி என்றழைக்கின்றனர்.

நீலகிரியின் பசுமையான சரிவுகளுக்கு இடையே அமைந்திருக்கும் அவலாஞ்சி ஏரி, உதகை நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

சுற்றியுள்ள காடுகளின் பசுமையையும் அமைதியையும் கொண்ட இந்த ஏரி, சுற்றுலா பயணிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது.

அங்கு இருக்கும் தேயிலை தோட்ட வாசம், காடுகளின் பசுமையுடன் எப்போதும் வெள்ளை மூடுபனியில் மறைக்கப்பட்ட ஒரு அழகிய ஏரி, அதன் பின்னணியில் இருக்கும் மலைகள் யாவும் நிச்சயம் பிரமிக்க வைக்கும்.

பனிச்சரிவு ஏரி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அழகிய பகுதியாகும். இது உள்ளூர் பழங்குடியினரின் உதவியுடன் மாசற்ற முறையில் பராமரிக்கப்படுகிறது.

ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் Spot
தர்மபுரியில் இருக்கும் 'மினி ஊட்டி'- பட்ஜெட் Spot-க்கு Trip செல்ல ரெடியா?

பருவமழை முடிந்தவுடன், மீன்பிடிப்பதற்காக ஏரி திறக்கப்படுகின்றன. ஏரியில் மீன்பிடிக்கும் போது, ​​தேவையான அனைத்து அடிப்படை அத்தியாவசிய பொருட்களும் அங்கு இருக்கும் மீன் பண்ணையில் கிடைக்கும்.

நகர வாழ்க்கையிலிருந்து ஒரு பிரேக் வேண்டும், அமைதி வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு சரியான இடமாக இது இருக்கும். பனிச்சரிவு ஏரி, ஒரு பரவசமான அனுபவத்தை கொடுக்கும் என்பதற்கு மாற்றுகருத்து இல்லை.

ஊட்டி : மலை வாசஸ்தலத்தில் மறைக்கப்பட்ட ”பனிச்சரிவு ஏரி” குறித்து தெரியுமா? பட்ஜெட் Spot
குற்றாலம்: ஊட்டி போன்ற மலைப்பாதை, துள்ளி குதிக்கும் மான்கள் - இந்த அருவிகளை தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com