ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் : 8 பேர் படுகாயம் | Video

பேருந்து கடலில் விழுவதற்கு ஒரு அடி தூரத்தில் இருந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 பாம்பன் பாலத்தில் விபத்து
பாம்பன் பாலத்தில் விபத்துTwitter
Published on

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வந்த அரசு மற்றும் தனியார் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், பாலத்தின் பாதுகாப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதியது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, பாம்பன் பாலத்தின் மீது சென்று கொண்டிருக்கையில் எதிரே வந்த அரசு பேருந்தின் மீது மோதி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் சென்று பாதுகாப்புச் சுவரில் மோதியது.

பேருந்து கடலில் விழுவதற்கு ஒரு அடி தூரத்தில் இருந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் பேருந்தில் ஏறி பயணிகளை மீட்டனர். அதன்பின், கயிறு கட்டி, பஸ்சை இழுத்து, கடலில் விழாமல் தடுத்தனர்.

ஏழு பேர் காயமடைந்தாலும், பயணிகள் மற்றும் ராமேஸ்வரம் வாசிகளின் உடனடி உதவியால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பாம்பன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 பாம்பன் பாலத்தில் விபத்து
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com