நாங்குநேரி: "அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதி..." பா.ரஞ்சித் கூறியதென்ன?

நாங்குநேரியில் பள்ளி மாணவருக்கு சக மாணவர்களால் சாதியின் பெயரில் நிகழ்ந்த கொடூரம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையாக தனது கருத்துக்களை எழுதியுள்ளார்.
நாங்குநேரி: "அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதி..." பா.ரஞ்சித் கூறியதென்ன?
நாங்குநேரி: "அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதி..." பா.ரஞ்சித் கூறியதென்ன?Twitter
Published on

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் சாதிய பாகுபாடு கருதி பள்ளி மாணவரை சக மாணவர்களே அரிவாளால் வெட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாணவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தங்கையும் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த அவல நிகழ்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போன்றோர் வேதனைத் தெரிவித்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச் செலவைத் தானே ஏற்பதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்Twitter

இந்த சம்பவம் குறித்து திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டுள்ளதாவது, "சாதி என்பது அழகிய சொல்! குடி பெருமை கொள்ளுவோம்! சாதி வாரி வேட்பாளர்களை களம் இறக்கி தேர்தல் வெற்றி பெருவது! சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் ஒன்றாக பார்ப்பது! நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவது! சாதி பெருமை உடை! சாதி அடையாள கயிறு! சாதி மறுப்பு காதலுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! என தமிழ்நாட்டில் இருக்கும் தீவிர சாதி பற்றின் காரணமாக, பட்டியலின மக்கள் மீது வெறுப்பை வளர்த்தெடுத்ததின் விளைவாகவே நாங்கு நேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சக மாணவன் மீது சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நமக்கு தெரிந்தவரை ஐந்துக்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாதி உணர்வு என்பது எப்படி பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பாக வளர்த்தெடுக்கபட்டு இருக்கிறது என்கிற உண்மை நிலவரத்தை இப்போதாவது சரியாக புரிந்துகொண்டு, இத்தகைய சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக திமுக அரசும், தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்!".

முன்னதாக இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இந்த சம்பவத்தைக் கண்டித்து ட்வீட் செய்திருந்தனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com