புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு (rep)
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு (rep)Twitter

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு: ஆட்டம் காண்பித்த காளையை அடக்கி சிறப்பு பரிசை தட்டி சென்ற வீரர்!

வடமலாப்பூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், ஆட்டம் காண்பித்த காளையை அடக்கி, மாடுபிடி வீரர் அமைச்சரின் சிறப்பு பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன

அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்துவிட்டன.

அடுத்ததாக இன்று, புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்கிறது. இதில் 300 மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் பங்கேற்க உள்ளனர்.

புதுக்கோட்டை வடமலாப்பூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், ஆட்டம் காண்பித்த காளையை அடக்கி, அமைச்சரின் சிறப்பு பரிசை தட்டிச் சென்ற வீரர்

logo
Newssense
newssense.vikatan.com