தென் தமிழ்நாடு நிவாரண பணிகள்: "அது தான் மனிதனுக்கு அடையாளம்" - சு.வெங்கடேசன் உருக்கம்!

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கினால் மரங்கள் சாய்கின்றன. கூரைகளும் ஓடுகளும் பறக்கின்றன. மேலே உயரம் போனால் உணவுப்பொட்டலங்கள் விழுந்து சிதறுகின்றன
தென் தமிழ்நாடு நிவாரண பணிகள்: "அது தான் மனிதனுக்கு அடையாளம்" - சு.வெங்கடேசன் உருக்கம்!
தென் தமிழ்நாடு நிவாரண பணிகள்: "அது தான் மனிதனுக்கு அடையாளம்" - சு.வெங்கடேசன் உருக்கம்!Twitter

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாக்குமரி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழை விட்டு ஒரு வாரம் ஆன போதிலும் மீட்புப்பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. பல இடங்களில் படகுகள் மூலமாகவும் படகுகள் செல்ல முடியாத பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமாகவும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குகின்றனர்.

உணவுப்பொட்டலங்களை வழங்குவதில் இருக்கும் பிரச்சனை பற்றி ஹெலிகாப்டரை இயக்கும் விமானிகளோடு பேசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன் உருக்கமான ட்வீடை பதிவு செய்துள்ளார்.

சு.வெங்கடேசனின் ட்வீட்,

“நாங்கள் மக்களுக்கு நெருக்கமாகத்தான் போக முயற்சிக்கிறோம். கீழே இறங்கினால் மரங்கள் சாய்கின்றன. கூரைகளும் ஓடுகளும் பறக்கின்றன. மேலே உயரம் போனால் உணவுப்பொட்டலங்கள் விழுந்து சிதறுகின்றன” என்று பெரும் தவிப்போடும், ஆற்றாமையோடும் சொன்னார்.

அந்த தவிப்பும் ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம்.

நான் வேறுயாருடனும் அவரை ஒப்பிடவிரும்பவில்லை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com