திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இளைஞருக்கு 20 வயதாகும் நிலையில், அவருக்கு பிறக்கும் போதே தாடையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இளைஞரால் எந்த உணவும் உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் பிறந்தது முதல் தற்போது வரை பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வருகிறார்.
இந்த பாதிப்புடன் பிறந்த அவரைப் பார்த்த மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், அவரது தாய், நம்பிக்கையுடன் இரவும் பகலும் தூக்கமில்லாமல் தன் குழந்தைக்கு பால் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் .
அவரால் 100 மில்லி லிட்டர் குடிக்கவே இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் ஆகுமாம். ஐந்து வயதில் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகே, அவரால் தானாக பால் குடிக்க முடிந்தது.
அவரது முக அமைப்பைக் கண்டு முதலில் அக்கம் பக்கத்தினர் பயத்தை வெளிப்படுத்தினர். அதன் பிறகு ஆண்டுகள் கழிந்து, அவரை புரிந்து கொண்ட சமூகம், அவருடன் உரையாடி வருவதாக அவரது தந்தை பிபிசியிடன் கூறியிருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust