ஆளுநர் ஆர்.என். ரவி : IPS அதிகாரி டு ஆளுநர் - 10 தகவல்கள்

பதவியேற்றது முதல் தொடர்ந்து தமிழக அரசுக்கு ஏட்டிக்கு போட்டியாக பேசி வருகிறார். தொடர்ந்து சர்ச்சைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும் இந்த ஆர்.என்.ரவி யார்?
ஆளுநர் ஆர்.என். ரவி : IPS அதிகாரி டு ஆளுநர்; பின்னணி என்ன? - 10 தகவல்கள்
ஆளுநர் ஆர்.என். ரவி : IPS அதிகாரி டு ஆளுநர்; பின்னணி என்ன? - 10 தகவல்கள்Twitter
Published on

இன்று சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வெளிநடப்பு செய்ததால் தமிழகம் முழுவதும் பேச்சு பொருளாகியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

தமிழ்நாட்டில் ட்ரெண்ட் ஆகிறது #GetoutRavi.

பதவியேற்றது முதல் பல முறை தமிழக அரசுக்கு ஏட்டிக்கு போட்டியாக பேசி வருகிறார். தொடர்ந்து சர்ச்சைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும் இந்த ஆர்.என்.ரவி யார்?

  • பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர நாராயண் ரவி, 1974ல் கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு பத்திரிகைத் துறையில் பணிபுறிந்தவர்.

  • 1976ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர், கேரள காவல்துறையில் உயர்பதவிகள் வகித்திருக்கிறார்.

  • சிபிஐ அதிகாரியாக இருந்தபோது டெல்லி வட்டாரங்களில் பிரபலமடைந்தார்.

  • மத்திய உளவுத் துறையான ஐபி-யில் மேற்கு மாநிலங்களை கவனிக்கும் பொறுப்பில் இருந்தார்.

  • ஐபி-யில் இருந்த போது காஷ்மீர் மற்றும் வடகிழக்கில் எழுந்த வன்முறையை ஒடுக்குவதில் மூளையாக செயல்பட்டார்.

  • உளவுத்துறை இயக்குநராக உயர்ந்தவர் 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

  • தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுக்கு நெருக்கமாக இருந்தார். 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த உடன் கூட்டு உளவுக்குழு தலைவரானார்.

  • தமிழகத்தில் மட்டுமின்றி அவர் முன்னதாக பதவிவகித்த நாகாலாந்திலும் சர்சைக்குறிய கருத்துகளைப் பேசி சிக்கிக்கொள்வது அவர் வழக்கம்

  • பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் போதே மாநில அரசுக்கு எதிரான கருத்துகளை அங்கு பேசியிருக்கிறார்.

ஏன் தமிழகத்துக்கு மாற்றப்பட்டார்?

'நாகாலிம்' என்ற இயக்கம் நாகாலாந்துடன் அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை இணைத்து தனி நாடாக அறிவிக்க ஆயுதமேந்திய போராட்டத்தை அறிவித்தது.

அந்த இயக்கத்துடன் தற்போதுவரை மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சு வார்த்தை குழு தலைவராக நியமிக்கப்பட்ட ரவி, 2019ம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராக அமர்த்தப்பட்டார்.

இதற்கிடையில் 2018ல் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்திருக்கிறார் ரவி.

ஆனால் இவரால் பிரச்னை மேலும் மேலும் பற்றி எரிந்ததே தவிர எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இனியும் இவர் இங்கே இருந்தால் சரிபட்டு வராது என அவரை தமிழகத்துக்கு மாற்றிவிட்டிருக்கிறது பாஜக அரசு.

இது குறித்து விரிவாக படிக்க இங்கு க்ளிக் செய்யவும்...

ஆளுநர் ரவி பத்திரிகைகளை சந்திப்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு நாகாலாந்திலும் இவர் மீது வைக்கப்பட்டிருக்கிறது.

ஆளுநர் ஆர்.என். ரவி : IPS அதிகாரி டு ஆளுநர்; பின்னணி என்ன? - 10 தகவல்கள்
ஆளுநர் மாளிகை : ஒரு ஆண்டிற்கு கோடிக்கணக்கில் செலவு - எவ்வளவு தெரியுமா.?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com