கணவனுடைய ஆவியின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட பெண்.. நடந்தது என்ன.?

இறந்த கணவரை தேடி, ஆன்மாக்களுடன் பேசும் ஒருவரை சந்தத்த பெண்ணுக்கு ஆவிகளின் சாட்சியாகவே திருமணம் நடைபெற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
England
EnglandTwitter

இங்கிலாந்திலுள்ள ஸ்விண்டனில் வசித்து வருபவர் தான் ஆஷா. இவரின் கணவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மூளையில் வீக்கம் ஏற்பட்டு திடீரென உயிரிழந்துவிட்டார்.

கணவரின் பிரிவை தாங்க முடியாமல் தினம் தினம் வாடி வந்த தாயை கண்டு மகள் சாஃப்ரான் மனவேதனை அடைந்தார். தாயை எப்படியாவது, முன்பு போன்று இயல்பு நிலைக்கு மீட்க வேண்டும் என்று எண்ணிய சாஃப்ரான், அவிகளுடன் பேசும் கெரின் ( வயது 60 ) என்பவரை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு சாஃப்ரானுக்கு ஒரு நம்பிக்கை தரவே, தன் தாயிடம் இது குறித்து கூறி, கெரினை சந்திக்குமாறு கேட்டுள்ளார்.

ஆஷா, சாஃப்ரன், ஜான்
ஆஷா, சாஃப்ரன், ஜான் twitter
England
Morning News Today : ஆஸ்கார் விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!

அங்கு தான் நடந்தது ஒரு டுவிஸ்ட், கெரினை சந்திக்கச் சென்ற ஆஷா, அவரை பார்த்ததுமே ஈர்க்கப்பட்டுள்ளார். இதில் அதிசயம் என்னவென்றால் அதே உணர்வு கெரினும் இருந்துள்ளது. இருவரும் எத்தனையோ ஜென்மங்களாக தங்களுக்குள் பந்தம் இருந்தது போல உணர்ந்தார்களாம்.

பின்னர் ஆஷா, சாஃப்ரன் மற்றும் கெரின் மூவருமாக ஆவிகளுடன் பேசும் மற்றொருவரை சந்திந்து பேசியுள்ளனர். அந்த நபர், சமீபத்தில்

இறந்த, நீரிழிவு மற்றும் இதயப் பிரச்சினை கொண்ட ஒருவரை தான் காண்பதாக கூற, அது தன் கணவர் ஜான்தான் என்று ஆஷா நம்பியுள்ளார். மேலும் இவையெல்லாம் ஏன் நடக்க வேண்டும் என்று எண்ணிய ஆஷா, கெரினையும் சந்திக்க வைத்ததற்கு ஜான் ஆவி தான் காரணம் என்றும் கெரினுடன் இணைந்து வாழவேண்டும் என ஜான் விரும்புவதாகவும் நம்பியுள்ளார்.

ஆஷா, சாஃப்ரன்,  கெரின்
ஆஷா, சாஃப்ரன், கெரின்twitter

இதற்கிடையில், ஒரு நாள் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என கெரின் ஆஷாவிடம் கேட்க, அவரும் அதற்கு சம்மதிக்க, கெரினும் ஆஷாவும் ஜானுடைய ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com