இங்கிலாந்து: "எனக்கு கார் கதவுகள் மீது போதை" - விநோத குற்றவாளிக்கு என்ன தண்டனை?

சாலையில், ஆளில்லாது எங்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும் அதன் கதவுகளை தொடுவதும், திறந்து பார்ப்பதும், உள்ளே நுழைவதும் தான் இவரது வேலை.
இங்கிலாந்து: ஆளில்லா கார் கதவுகளை திறக்கும் போதை ஆசாமி - பிடிப்பட்டது எப்படி? தண்டனை என்ன?
இங்கிலாந்து: ஆளில்லா கார் கதவுகளை திறக்கும் போதை ஆசாமி - பிடிப்பட்டது எப்படி? தண்டனை என்ன?ட்விட்டர்
Published on

இங்கிலாந்தை சேர்ந்த 44 வயதான பால் என்ற நபருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தான் சற்று வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.

சத்யராஜ் சொல்வது போல மனிதர்கள் ஒரு ஒருவருக்கும் ஒவ்வொன்றின் மீது போதை. அப்படி இந்த பால் ப்ரீஸ்ட்லி என்ற நபருக்கு கார் கதவுகள் மீது போதையாம்!

சாலையில், ஆளில்லாது எங்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும் அதன் கதவுகளை தொடுவதும், திறந்து பார்ப்பதும், உள்ளே நுழைவதும் தான் இவரது வேலை.

அப்படி ஒரு முறை இவர் கார் கதவுகளை திறக்கும் காட்சி ஒன்று சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார் பால்.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது பால், தான் கார் கதவுகளுக்கு அடிமையாகியுள்ளதாக (addicted) தெரிவித்தார்.

44 வயதாகும் பால் ப்ரீஸ்ட்லி, இங்கிலாந்தின் பென்னிங்டன் என்ற இடத்தை சேர்ந்தவர். இவர் இதற்கு முன் 2018ல் இதே குற்றத்திற்காக் கைது செய்யப்பட்டார்.

இங்கிலாந்து: ஆளில்லா கார் கதவுகளை திறக்கும் போதை ஆசாமி - பிடிப்பட்டது எப்படி? தண்டனை என்ன?
Bed ஐ Bread போல சாப்பிடும் விநோத பெண் - 20 ஆண்டுகளாக தொடரும் பழக்கம் - எங்கே?

அப்போது, அனுமதியில்லாம், நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் எந்த கார்களையும் தொடக்கூடாது என 5 ஆண்டுகளுக்கு அவருக்கு தடை விதித்து தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டுடன் அந்த தடை நிறைவடையவே மீண்டும் கேட்பாரற்று நிற்கும் கார் கதவுகளை திறக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் மீண்டும் கைது செய்யப்பட்ட பாலுக்கு 9 மாதங்கள் சிறையும், மீண்டும் 2027 வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தவிர அந்த நபருக்கு போதை பழக்கம் இருப்பதாகவும், அவர் மீது நூற்றுக்கணக்கில் திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து: ஆளில்லா கார் கதவுகளை திறக்கும் போதை ஆசாமி - பிடிப்பட்டது எப்படி? தண்டனை என்ன?
Xylazine : திடீரென ஜாம்பியாக மாறும் மக்கள்- அழுகும் தோல்; மனிதர்களை மிருகமாக மாற்றும் போதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com