Shinzo Abe : ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு - என்ன நடந்தது? | Video

ஷின்சோ அபே நீண்ட காலமாக ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த ஆகஸ்ட் 2020ல் அவர் உடல்நிலை காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Shinzo Abe
Shinzo AbeTwitter
Published on

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு நகரமான நாராவில் இடம்பெற்ற பிரச்சாரம் ஒன்றில் உரையாற்றிக்கொண்டு இருக்கும் போது இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம் பெற்றதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Shinzo Abe
Shinzo AbeTwitter

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டத் தகவலின்படி அபேவுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது. அபேவின் மார்பில் இரண்டு குண்டுகள் வரை பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Shinzo Abe
சுனாமி : ஜப்பான் முதல் இந்தோனேசியா வரை - உலகின் வரைபடத்தை மாற்றிய மோசமான 8 சுனாமிகள்

சம்பவ இடத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த செய்தியாளர் கூறுகையில், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அபே ரத்தக் காயங்களுடன் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

தற்போதைய நிலை என்ன என்பது குறித்த எந்த தகவல்களும் இல்லை

ஷின்சோ அபே நீண்ட காலமாக ஜப்பான் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். கடந்த ஆகஸ்ட் 2020ல் அவர் உடல்நிலை காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shinzo Abe
நடுங்க வைக்கும் ஜப்பான் சிறைகள் - என்ன நடக்கிறது அங்கே? - அதிர வைக்கும் தகவல்கள்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com