வாலுடன் பிறந்த குழந்தை; பெற்றோர் அதிர்ச்சி! மருத்துவர்கள் சொல்வதென்ன?

குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்து வாலை மருத்துவர்கள் அகற்றினர்.
newborn baby (rep)
newborn baby (rep)Twitter

மெக்சிகோவில் ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்துள்ள சம்பவம் பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அந்த குழந்தை இரண்டு அங்குல நீளமுள்ள வாலுடன் பிறந்துள்ளது.

இதுவரை இது போன்று வாலுடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, உலகளவில் 200க்கும் குறைவாகவே இருப்பதாக டைம்ஸ் நவ் தளம் கூறுகிறது

இந்த பெண் குழந்தை மெக்சிகோவின் நியூவோ லியான் மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு முன் பிறந்துள்ளது. சி-செக்ஷன் மூலம் பிறந்த இந்த குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கர்ப்ப காலத்திலும் தாயும் சேயும் நலமாகவே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது மெக்சிகோவில் பதிவு செய்யப்பட்ட முதல் கேஸ் என மருத்துவர் ஜோஸ் ரூடா கூறியிருக்கிறார்

newborn baby (rep)
கேன்சரால் மூக்கை இழந்த பெண்; கையில் மூக்கை வளர்த்து முகத்தில் பொருத்திய மருத்துவர்கள்

மருத்தவர்கள் இது குறித்து பேசுகையில், குழந்தையின் உடலில் இருக்கும் அந்த வால், மென்மையாகவும், தோல் மற்றும் முடியினால் மூடப்பட்டிருந்தது என்றனர்.

குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்து வாலை மருத்துவர்கள் அகற்றினர். குழந்தை பிறந்தபோது வாலை கவனித்த மருத்துவர்கள், அதன் மேல் ஊசியை குத்தி பார்த்தபோது குழந்தை வலியால் அழுததாக தெரிவித்தனர். குழந்தை அதே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது மற்றும் எந்த சிக்கல்களும் ஏற்படவில்லை

பகுப்பாய்வுகளின் படி, அது தசை, இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளைக் கொண்ட ஒரு "உண்மையான வால்" என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

"ஆனால், அதில் எலும்புகள் இல்லை, நாம் விலங்குகளில் பார்ப்பதை போன்றது"

கருப்பையில் வளரும் கருவின் வாலிலிருந்து இந்த வால் எல்லாக் குழந்தைகளுக்கும் வெளிப்படுவதாகக் கருதப்படுகிறது. ஆனால் பொதுவாக அது மீண்டும் உடலால் உள் இழுக்கப்பட்டு அது டெயில் போன் ஆக உருவாக்குகிறது.

"உண்மையான வால்கள்" மிகவும் அரிதானவை. இதுவரை கண்டறியப்பட்ட வால்களில், மிக நீளமானவை 20 சென்டிமீட்டர் (7.9 அங்குலங்கள்) ஆகும்.

அவை பெரும்பாலும் ஆண் குழந்தைகளில் காணப்படுகின்றன, மேலும் வால்களைக் கொண்ட 17 குழந்தைகளில் ஒருவர் மூளை அல்லது மண்டை ஓடு வளர்ச்சிக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றனர் என டைம்ஸ் நவ் தளம் தெரிவிக்கிறது.

newborn baby (rep)
பிலிபைன்ஸில் பிறந்த உலகின் 800 கோடியாவது குழந்தை; மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com