Afghanistan : விவாகரத்து செல்லாது! கணவரோடு வாழ வற்புறுத்தும் தாலிபான்கள் - அலறும் பெண்கள்

யூ என் மிஷனின் அறிக்கையின்படி பத்தில் ஒன்பது பெண்கள் தங்களது கணவர்களால் உடல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
Taliban: விவாகரத்து செல்லாது!  கணவரோடு வாழ வற்புறுத்தும் புதிய நடவடிக்கை - அலறும் பெண்கள்
Taliban: விவாகரத்து செல்லாது! கணவரோடு வாழ வற்புறுத்தும் புதிய நடவடிக்கை - அலறும் பெண்கள்ட்விட்டர்
Published on

குடும்ப வன்முறைக் காரணமாக விவாகரத்து பெற்ற ஆப்கான் பெண்களை மீண்டும் கணவருடன் இணைந்து வாழச் சொல்லி வற்புறுத்தி வருகிறது தாலிபான் அரசு.

அவர்கள் பெற்ற விவாகரத்தும் செல்லுபடியாகாது என அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது தாலிபான் அமைப்பு. அப்போது முதல் அந்நாட்டில் கடும் சட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

முக்கியமாக பெண்கள் சுதந்திரத்தை முடக்கும் விதத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் அமைந்திருக்கின்றன.

பள்ளிக் கல்லூரிகளுக்கு செல்ல தடை, கட்டாயமாக ஹிஜாப் அணியவேண்டும், ஆண் துணை இல்லாமல் எங்கும் வெளியில் செல்லக்கூடாது, விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்கக்கூடாது போன்ற விதிமுறைகள் இருக்கின்றன.

ஏற்கனவே எரிந்துக்கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல வந்திருக்கிறது அடுத்த சட்டம்.

AFP செய்தித்தளத்தின் அறிக்கையின்படி, விவாகரத்து பெற்ற பெண்களை தங்களது கணவர்களுடன் இணைந்து வாழுமாறு வற்புறுத்தி வருகிறது தாலிபான் அரசு. அவர்கள் பெற்ற விவாகரத்து செல்லுபடியாகாது எனவும் கூறப்பட்டுள்ளது.

கணவர்களால் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் பலரும் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தபோது விவாகரத்து பெற்றிருந்தனர்.

ஐ.நா மிஷன் அறிக்கையின்படி, 9/10 பெண்கள் தங்களது கணவர்களால் உடல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஆனால், விவாகரத்து பெறுவதை விட துன்புறுத்தும் கணவர்களோடு சகித்துக்கொண்டு வாழ்வதில் தவறில்லை என தாலிபான் அரசுக் கூறுகிறது.

Taliban: விவாகரத்து செல்லாது!  கணவரோடு வாழ வற்புறுத்தும் புதிய நடவடிக்கை - அலறும் பெண்கள்
ஈரான்: ஹிஜாப் அணியாமல் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை - நாடு திரும்பக் கூடாது என மிரட்டல்

மார்வா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் அவரது கணவரால் குடும்ப வன்முறைக்கு ஆளானவர். ஒரு முறை அவரது கணவர் தாக்கியதில் மார்வாவின் பற்கள் அனைத்து உடைந்து சிதறியது.

அதன் பிறகு விவாகரத்து பெற்ற மார்வா தனது 8 குழந்தைகளுடன் தொலைதூரத்தில் இருக்கும் அவரது உறவினர் வீட்டிற்கு தப்பிச் சென்றார்.

அவர்கள் அனைவரும், முன்னாள் கணவருக்கு பயந்து வேறு பெயர் மற்றும் அடையாளங்களுடன் வாழ்ந்து வருவதாக AFP செய்தித் தளத்திடம் அவர் கூறினார்.

ஆனால் தற்பொது மார்வாவை அவரது கணவருடன் இணைந்து வாழுமாறு தாலிபான் அரசு வற்புறுத்திவருகிறது.

தாலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு, அவரது வேலை பறிக்கப்பட்டதாக நாசிஃபா என்ற பெண் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இவர் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்த ஆப்கானிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகளை கையாண்டவர்.

மேலும், தற்போது தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானில், பெண்கள் விவகாரம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் முற்றிலுமாக செயலிழக்கச்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Taliban: விவாகரத்து செல்லாது!  கணவரோடு வாழ வற்புறுத்தும் புதிய நடவடிக்கை - அலறும் பெண்கள்
தாலிபான்: ”ஆண் மருத்துவர்களிடம் பெண்கள் சிகிச்சை பெறக் கூடாது” அரசு அதிரடி உத்தரவு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com