Microsoft: உலகின் அமைதியான அறை இது தான் - எங்கிருக்கிறது? உள்ளே என்ன நடக்கும்?
Microsoft: உலகின் அமைதியான அறை இது தான் - எங்கிருக்கிறது? உள்ளே என்ன நடக்கும்?ட்விட்டர்

இந்த அறையில் உங்கள் இதயத்துடிப்பை கேட்கலாம்; உலகின் அமைதியான இடம் - ஆச்சரிய தகவல்கள்

சுற்றியுள்ள கட்டிடங்களிலிருந்து இந்த சேம்பர் தனித்துள்ளது. ஆறு அடுக்குகள் கான்கிரீட் மற்றும் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அறைக்கு கீழே அதிர்வுகளை மூட்டும் நீரூற்றுகளின் வரிசை உள்ளது. அறைக்குள் தரை, கூரை மற்றும் சுவர்களில் ஃபைபர் கிளாஸ் ஆப்புகள் பொருத்தப்படுகின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு கட்டப்பட்ட அறை ஒன்றினை உலகின் அமைதியான அறை என்று அங்கீகரித்துள்ளது கின்னஸ் உலக சாதனைகள்.

மனிதன் அமைதி என்ற ஒன்றைத் தேடித் தான் இவ்வளவு ஓடிக்கொண்டிருக்கிறான். மனதிற்கு உள்ளும், வெளியிலும் அதனை அடைவது அசாத்தியமாகிறது.

ஆனால், நாம் தேடும் அந்த அமைதி நமக்கு கிடைக்குமென்றால்? நினைத்ததை விட அதிகமாக?

கடந்த 2015 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் தலைமையகமான வாஷிங்டனின் ரெட்மாண்டில் உள்ள அலுவலகத்தில் புதிய அறை ஒன்றை வடிவமைத்தது. இந்த அறையினை அனெகோயிக் சேம்பர் என்று அழைக்கிறது நிறுவனம். அதாவது, இந்த அறையில் எதிரொலிகள் கேட்காது. இந்த அறையை உருவாக்க இவர்களுக்கு இரண்டு வருடங்கள் ஆனது.

இந்த அறையில் மனித செவிப்புலன் எல்லைக்கு கீழே 20 டெசிபல்கள் கொண்ட அளவிடப்பட்ட பின்னணி சத்தம் உள்ளது.

Microsoft: உலகின் அமைதியான அறை இது தான் - எங்கிருக்கிறது? உள்ளே என்ன நடக்கும்?
'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

"அறையில் இரண்டு அல்ட்ரா சென்சிடிவ் சோதனைகள் செய்யப்பட்டன. ஒரு சோதனை முடிவு -20.6 டிபிஏ மற்றும் மற்றொன்று -20.1 டிபிஏ என்று கின்னஸ் உலக சாதனைகள் தெரிவித்தன.

இதனை உலகின் அமைதியான அறை என்று கின்னஸ் உலக சாதனைகள் சொல்கிறது.

இந்த அறை எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது?

சுற்றியுள்ள கட்டிடங்களிலிருந்து இந்த சேம்பர் தனித்துள்ளது. இணைக்கப்படவில்லை. ஆறு அடுக்குகள் கான்கிரீட் மற்றும் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறைக்கு கீழே அதிர்வுகளை மூட்டும் நீரூற்றுகளின் வரிசை உள்ளது. அறைக்குள் தரை, கூரை மற்றும் சுவர்களில் ஃபைபர் கிளாஸ் ஆப்புகள் பொருத்தப்படுகின்றன.

இந்த அறையில் இருந்தால் என்னவாகும்?

அறையில் நுழைந்து ஒரு சில நிமிடங்க்களுக்கு பிறகு, அந்த நிசப்தம் நம்மை ஆட்கொள்ள தொடங்கும்போது, மெல்ல முதலில் நம் இதயத் துடிப்பை கேட்கலாம். தொடர்ந்து எலும்புகள் அரைபடுவதும், ரத்த ஓட்டத்தின் சத்தமும் கேட்கத் தொடங்கும்.

இந்த அறையின் சிறப்பம்சமே, வெளியுலக சத்தங்களை இது முற்றிலுமாக விலக்கிவிடும். அந்த அறைக்குள் இருக்கும் சமயத்தில் நம் காதுகளுக்கு கேட்கும் ஒரே சத்தம், நமது உடலில் ஏற்படும் செயல்பாடுகளின் சப்தம் தான்.

இதை எத்தனை மணி நேரத்திற்கு நம்மால் பொருத்துக்கொள்ள இயலும்? சிந்தித்துப் பாருங்கள்! தலைச் சுற்றலாம், ஒரே மாதிரியான சப்தத்தை தொடர்ந்து செவித்து வருவதால் அது நமக்கு எரிச்சலூட்டலாம். அமைதியைத் தேடி உள்ளே நுழைந்தால், உண்மையில் அதனை இழந்துவிடும் வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கும்.

Microsoft: உலகின் அமைதியான அறை இது தான் - எங்கிருக்கிறது? உள்ளே என்ன நடக்கும்?
வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிக பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com