இத்தாலி: ஆங்கிலத்தில் பேசினால் அபராதம்; புதிய சட்டத்தை வகுக்கும் அரசு - என்ன காரணம்?

அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பிரதமர் அறிவித்திருக்கிறார்
இத்தாலி: ஆங்கிலத்தில் பேசினால் அபராதம்; புதிய சட்டத்தை வகுக்கும் அரசு - என்ன காரணம்?
இத்தாலி: ஆங்கிலத்தில் பேசினால் அபராதம்; புதிய சட்டத்தை வகுக்கும் அரசு - என்ன காரணம்?ட்விட்டர்

இனி ஆங்கிலத்தில் பேசினால் அபராதம் விதிக்கப்படும் என புதிய அறிவிப்பை விடுத்துள்ளது இத்தாலி அரசு.

டேட்டா பிரவைசி தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக கருதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட் ஜிபிடியை தற்காலிகமாக தடை செய்தது இத்தாலி. இந்த தடை அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, ஆங்கிலம் மற்றும் இதர மொழி பயன்பாட்டுக்கு எதிரான தடை மசோதா செய்தி வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கிலத்தை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் மசோதாவை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சி நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.

"இத்தாலி நாட்டு மக்கள் தங்கள் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பின் போது ஆங்கிலம் அல்லது வேறு எந்த வெளிநாட்டு மொழியையும் பயன்படுத்தினால், அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் 100,000 யூரோ (சுமார் 90 லட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டும்" என்று சி.என்.என் தெரிவித்துள்ளது.

இத்தாலி: ஆங்கிலத்தில் பேசினால் அபராதம்; புதிய சட்டத்தை வகுக்கும் அரசு - என்ன காரணம்?
வட கொரியா: அதிபர் மகள் பெயரை யாரும் சூட்டக்கூடாது - புதிய தடை விதித்த கிம் ஜாங் உன் அரசு!

ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு தங்களது மொழியை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது எனவும், இத்தாலிய மொழியை பாதுகாக்கும் வண்ணம் இந்த நடவடிக்கிய எடுக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமரின் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமாக தற்போது இல்லாத பட்சத்தில் ஆங்கிலம் பயன்படுத்த என்ன அவசியம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பட்டுள்ளது.

இந்த மசோதா இன்னும் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துச் செல்லப்படவில்லை. இரு கட்சிகளும் இந்த புதிய நடவடிக்கைக்கு ஆமோதித்த பின்னரே இச்சட்டம் அமலுக்கு வரும். அப்படி அமல்படுத்தப்படும் பட்சத்தில், நிர்வாக ரீதியான பயன்பாடுகள் மட்டுமல்லாது, நிறுவன பெயர்கள், குறுஞ்ச்சொற்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள், தினசரி பேச்சுமொழி உட்பட அனைத்திலிருந்தும் ஆங்கிலம் அகற்றப்படவேண்டியதாக இருக்கும்.

இத்தாலி: ஆங்கிலத்தில் பேசினால் அபராதம்; புதிய சட்டத்தை வகுக்கும் அரசு - என்ன காரணம்?
கனடா: அரசு தகவல்களை திருடியதா சீன செயலி டிக் டாக்? - தடை செய்ய காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com