பெண்களுக்கான செஸ் போட்டியில் புர்கா அணிந்து கொண்டு பங்கேற்ற ஆண் - சிக்கியது எப்படி?

தனது செயலுக்கு வருந்துவதாகவும், இந்த தொடரில் பட்டம்வென்றால் அதன் மூலம் வரும் பணம் தனக்கு உதவியாக இருக்கும் என ஓமோண்டி கூறியதாக அந்த அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பெண்களுக்கான செஸ் போட்டியில் புர்கா அணிந்து கொண்டு பங்கேற்ற ஆண் - சிக்கியது எப்படி?
பெண்களுக்கான செஸ் போட்டியில் புர்கா அணிந்து கொண்டு பங்கேற்ற ஆண் - சிக்கியது எப்படி?Twitter

செஸ் வீரர் ஒருவர் தனது நாட்டில் நடைபெற்ற பெண்களுக்கான செஸ் போட்டியில் பெண் வேடமிட்டு பங்கேற்று மாட்டி கொண்ட சம்பவம் கென்யாவில் அரங்கேறியுள்ளது.

கென்யாவில் 25 வயதான ஸ்டான்லி ஓமோண்டி என்பவர் செஸ் வீரர் ஆவார். இந்த நிலையில் கென்யாவில் பெண்களுக்கான செஸ் போட்டி நடந்துவருகிறது. இதில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோருக்கு பரிசு தொகைவழங்கப்படும்.

தான் ஒரு ஆணாக இருப்பதால் செஸ் போட்டியில் பங்கேற்க முடியாது என்பதால் புர்கா மற்றும் மூக்கு கண்ணாடி அணிந்து அடையாளம் தெரியாத வகையில் மாறினார் ஸ்டான்லி.

மேலும் தனது பெயரை ஸ்டான்மி ஓமோண்டி என்பதை மில்லி சென்ட் என பதிவு செய்தார். ஆனால் அங்கு இருந்த அதிகாரிகள் மூலமாக வசமாக மாட்டி கொண்டதால் அவரது திருட்டு செயல் அம்பலமானது.

சிக்கியது எப்படி

ஓமோண்டியை கண்டுபிடித்தது குறித்து செஸ் போட்டியை நடத்திய அதிகாரிகள் கூறுகையில் :

முதலில் எங்களுக்கு சந்தேகம் வரவில்லை ஆனால் இந்த போட்டியில் அவர் வலிமையான வீரர்களையும் எளிதில் தோற்கடித்தார். அதே சமயம் அவர் யாரிடமும் பேசவில்லை.

மேலும் ஓமோண்டி அணிந்திருந்த ஷூ ஆண்கள் அணியும் ஷூ உடன் ஒத்து போனதை பார்த்து, தான் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

திறமையான ஒரு செஸ் வீராங்கனையினை தோற்கடித்த போது நாங்கள் அவரை சோதனைக்கு அழைத்தோம் அப்போது அவர் எங்களிடம் தான் ஒரு ஆண் என்பதை ஒப்புக்கொண்டார்.

மேலும் தனது செயலுக்கு வருந்துவதாகவும், இந்த தொடரில் பட்டம்வென்றால் அதன் மூலம் வரும் பணம் தனக்கு உதவியாக இருக்கும் என ஓமோண்டி கூறியதாக அந்த அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கென்யா தலைநகர் நைரோபியில் கடந்த வாரம் தொடங்கிய ஓபன் செஸ் போட்டியில் 22 நாடுகளை சேர்ந்த 400 - க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இதில் வெற்றி பெறுவோருக்கு 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2.45 லட்சம் ) பரிசாக கிடைக்கும்.

பெண்களுக்கான செஸ் போட்டியில் புர்கா அணிந்து கொண்டு பங்கேற்ற ஆண் - சிக்கியது எப்படி?
எரித்ரியா : ஒரு ஆண் இரு பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் - இது உண்மையா?

கென்யாசெஸ் போட்டியில் பாலின மோசடி நடந்துள்ளது இதுவே முதன் முறையாகும். இந்த நிலையில் இது குறித்து செஸ் கென்யாவின் தலைவர் கூறுகையில் ஓமண்டி தனது செயலுக்காக பல ஆண்டுகள் தடையை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

பணதிற்காக ஆசைப்பட்டு ஓமண்டி செய்த செயல் , தற்போது அவரது பெயருக்கும் கனவுக்கும் தடையாகியுள்ளது

பெண்களுக்கான செஸ் போட்டியில் புர்கா அணிந்து கொண்டு பங்கேற்ற ஆண் - சிக்கியது எப்படி?
வாழைப்பழங்களுக்கு அஞ்சும் ஆண் எலிகள் - ஆச்சரியப்படுத்தும் ஆய்வு தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com