வீட்டுவேலை செய்யவா மனைவி? வழக்கு தொடுத்த பெண்- ரூ.1.75 கோடி வழங்க கணவனுக்கு உத்தரவு

குழந்தைகளை பராமரிப்பதும், கணவருக்கு பணிவிடைகள் செய்வதும், குடும்பத்தை கவனிப்பதும், வீட்டு வேலைகள் அனைத்தும் செய்வதும்தான் இவானாவின் கடந்த 20 ஆண்டுகால வாழ்க்கை. அவ்வப்போது அவரது கணவர் நடத்திவந்த உடற்பயிற்சிக்கூடத்தை பராமரிக்கும் வேலையும் இந்த பட்டியலில் இடம்பெறும்.
வீட்டுவேலை செய்ய திருமணம்? வழக்கு தொடுத்த மனைவி - ரூ.1.75 கோடி வழங்க கணவனுக்கு உத்தரவு (rep)
வீட்டுவேலை செய்ய திருமணம்? வழக்கு தொடுத்த மனைவி - ரூ.1.75 கோடி வழங்க கணவனுக்கு உத்தரவு (rep)canva
Published on

கடந்த 25 ஆண்டுகளாக தனியே வீட்டுவேலைகள் செய்த மனைவிக்கு ரூ.1.75 கோடி நஷ்டயீடு வழங்குமாறு கணவனுக்கு உத்தரவிட்டுள்ளது ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம்.

முன்பெல்லாம், மனைவிகள் (பெண்கள்) வீட்டுவேலைகள் அனைத்தும் செய்பவர்களாகவும், வெளியில் சென்று வேலைகள் பார்க்கும் பொறுப்பில் ஆண்களும் இருந்தனர்.

இந்த நிலை மாறியது. ஆண், பெண் இருவரும் சமம் எனவும், எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்யலாம் என்ற மனநிலை மக்களுக்கு வந்தது.

எனினும் இன்னும் சில இடங்களில் பெண்கள் வீட்டுவேலைகளுக்கு என்று மட்டுமே என்ற ஒரு வட்டத்திற்குள் சுருக்கப்படுகின்றனர்.

எனது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னை வீட்டு வேலைகள் மட்டுமே செய்யவைத்தார், இதற்காகவே என்னை திருமணம் செய்துகொண்டார் என்று புகார் அளித்திருக்கிறார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர்.

இவானா மொரால் என்ற அந்த பெண்னுக்கு திருமணமாகி இரண்டு தசாபதங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.

குழந்தைகளை பராமரிப்பதும், கணவருக்கு பணிவிடைகள் செய்வதும், குடும்பத்தை கவனிப்பதும், வீட்டு வேலைகள் அனைத்தும் செய்வதும் தான் இவானாவின் கடந்த 20 ஆண்டுகால வாழ்க்கை.

அவ்வப்போது அவரது கணவர் நடத்திவந்த உடற்பயிற்சிக்கூடத்தையும் பராமரிக்கும் வேலையும் இந்த பட்டியலில் இடம்பெறும்.

வீட்டுவேலை செய்ய திருமணம்? வழக்கு தொடுத்த மனைவி - ரூ.1.75 கோடி வழங்க கணவனுக்கு உத்தரவு (rep)
அம்மா வீட்டுக்கு சென்ற மனைவி; ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவன் - எங்கே?

இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான இவானா தன் கணவரிடம் விவாகரத்து கோரினார். தனது சுதந்திரம் மற்றும் தனித்துவம் பறிக்கப்படுவதாக அவர் கூறினார்.

இத்தனை ஆண்டுகளாக வீட்டு வேலைகளை மட்டுமே செய்துவந்ததால், தன்னால் வேறு எதையுமே கையாள முடியாது என்ற எண்ணம் வந்துவிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இவானாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்து வந்த இவானாவுக்கு அவரது முன்னாள் கணவர் ரூ.1.75 கோடி வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டுவேலை செய்ய திருமணம்? வழக்கு தொடுத்த மனைவி - ரூ.1.75 கோடி வழங்க கணவனுக்கு உத்தரவு (rep)
கிம் கர்தாஷியன் விவாகரத்து: மாதம் ரூ.1.6 கோடி இழப்பீடு கொடுக்கும் முன்னாள் கணவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com