Argentina: அணி வீரர்களுக்கு 35 'கோல்டன்' ஐஃபோன்களை பரிசாக வழங்கிய மெஸ்ஸி- புகைப்படம் வைரல்

ஒவ்வொரு ஐஃபோனிலும் ஒவ்வொரு அணி வீரரின் பெயர், அவர்களது ஜெர்ஸி நம்பர் மற்றும் அர்ஜென்டினா அணியின் லோகோ மற்றும் உலகக்கோப்பை சாம்பியன்கள் 2022 என பொறிக்கப்பட்டுள்ளது.
Argentina: அணி வீரர்களுக்கு 35 ’கோல்டன்’ ஐஃபோன்களை பரிசாக வழங்கிய மெஸ்ஸி- புகைப்படம் வைரல்
Argentina: அணி வீரர்களுக்கு 35 ’கோல்டன்’ ஐஃபோன்களை பரிசாக வழங்கிய மெஸ்ஸி- புகைப்படம் வைரல்Newssense

தனது அணியின் சக வீரர்களுக்கு தங்க முலாம் பூசிய ஐஃபோன்களை பரிசாக வழங்கியிருக்கிறார் அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி.

கடந்த ஆண்டு கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் நடைப்பெற்றது. இதில் கால்பந்து உலகின் ஜாம்பவான்களாக கருதப்படும் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவரின் அணிகளும் பங்கேற்றன.

ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவரும் இதுவரை கால்பந்து உலகக்கோப்பையை வெல்லாததால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரு மடங்காக இருந்தது

இந்நிலையில், கிறிஸ்டினோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி காலிறுதியில் மொராக்கோவிடம் தோற்று உலகக்கோப்பையை கைப்பற்றும் ரேஸிலிருந்து வெளியேற, அனைவரது கவனமும் மெஸ்ஸியின் பக்கம் திரும்பியது.

எதிர்பார்த்ததை போலவே லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, பிரான்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்ற அர்ஜென்டினா 36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த வெற்றிக்கொண்டாட்ட களிப்புகள் இன்னும் முடிந்தபாடில்லை. தன்னுடன் அர்ஜென்டினா அணியில் விளையாடிய சக வீரர்களுக்கு 35 கோல்டன் ஐஃபோன்களை பரிசாக வழங்கியிருக்கிறார் அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி.

கடந்த சனிக்கிழமை அன்று சுமார் ரூ1.73 கோடி மதிப்பிலான பரிசுகள் பாரிஸில் இருக்கும் மெஸ்ஸியின் அபார்ட்மெண்ட்டிற்கு வந்தடைந்ததாக தி சன் செய்தி தளம் தெரிவிக்கிறது.

இதில் 35 ஆப்பிள் ஐஃபோன்கள் இருந்தன. இவ்வனைத்துமே 24 கேரட் தங்கம் முலாம் பூசப்பட்ட ஐஃபோன் 14 எஸ் மொபைல் ஃபோன்கள் என அந்த அறிக்கை கூறுகிறது

Argentina: அணி வீரர்களுக்கு 35 ’கோல்டன்’ ஐஃபோன்களை பரிசாக வழங்கிய மெஸ்ஸி- புகைப்படம் வைரல்
FIFA World Cup 2022: "மெஸ்ஸி உலக கோப்பையை கைப்பற்றுவார்" - 7 ஆண்டுகள் பழைய ட்வீட் வைரல்!

ஒவ்வொரு ஐஃபோனிலும் ஒவ்வொரு அணி வீரரின் பெயர், அவர்களது ஜெர்ஸி நம்பர் மற்றும் அர்ஜென்டினா அணியின் லோகோ மற்றும் உலகக்கோப்பை சாம்பியன்கள் 2022 என பொறிக்கப்பட்டுள்ளது.

தனது அணியின் இந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை ஸ்பெஷலாக கொண்டாட வேண்டும், நினைவில் வைத்திருக்க வேண்டும் என மெஸ்ஸி இந்த பரிசை அளித்ததாக பிரிட்டிஷ் செய்தி தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இதற்காக ஸ்மார்ட்ஃபோன்களை கஸ்டமைஸ் செய்யும் நிறுவனமான  IDESIGN Goldன் சி இ ஓவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த சி இ ஓ, வழக்கமாக வழங்கப்படும் வாட்சுகள் போன்ற பரிசுகள் அல்லாமல், பெயர்கள் பொறிக்கப்பட்ட கோல்டன் ஐஃபோன்களை பரிசளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த ஐடியா மெஸ்ஸிக்கும் பிடித்துப்போகவே ஐஃபோன்கள் கஸ்டமைஸ் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன

Argentina: அணி வீரர்களுக்கு 35 ’கோல்டன்’ ஐஃபோன்களை பரிசாக வழங்கிய மெஸ்ஸி- புகைப்படம் வைரல்
FIFA : உலக கோப்பையை பெறும்போது மெஸ்ஸிக்கு கருப்பு அங்கி அணிவிக்கப்பட காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com