வடகொரியா: படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை- கிம் ஜாங் உன் அரசு அதிரடி அறிவிப்பு

தடையை மீறி மேற்கத்திய படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வட கொரிய அரசு தெரிவித்திருக்கிறது.
வடகொரியா: படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை- கிம் ஜாங் உன் அரசு அதிரடி அறிவிப்பு
வடகொரியா: படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை- கிம் ஜாங் உன் அரசு அதிரடி அறிவிப்புtwitter

வெளிநாட்டு படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என வட கொரிய அரசு தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் உன் தலைமையில் இருக்கும் வட கொரியா நாட்டில் இணையதளம், சமூக வலைதளம் போன்றவை கிடையாது. குறிப்பிட்ட டிவி சேனல்களை மட்டும் நிறைய கட்டுப்பாடுகளுடன் மக்களின் பயன்பாட்டுக்கு அரசு அனுமதித்துள்ளது.

மேலும் சினிமா வெப் சீரீஸ்களின் சிடிக்களை பார்ப்பதற்கும், விற்பதற்கும் அங்கு தடை உள்ளது.

இதனை கண்காணிக்க அங்கு ஒரு தனிக்குழு இருப்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஆண்டு சட்டவிரோதமாக தென் கொரிய வெப் சீரீஸ் பார்த்த இரண்டு சிறுவர்கள் தூக்கிலிடப்பட்ட சம்பவம் உலகை உலுக்கியது.

வடகொரியா: படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை- கிம் ஜாங் உன் அரசு அதிரடி அறிவிப்பு
வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1

குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை:

இந்நிலையில், தடையை மீறி மேற்கத்திய படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வட கொரிய அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த குற்றத்தில் ஈடுபடும் குழந்தைகள், இதனை முதன்முறை தான் செய்கிறார்கள் என்றாலும் தண்டனைக்குறியவர்களாகவே கருதப்படுவர் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

பெற்றோருக்கும் தண்டனை

மேற்கத்திய தொடர்கள், படங்களை குழந்தைகள் பார்க்க அனுமதிக்கும் பெற்றோருக்கும் தண்டனையை அறிவித்திருக்கிறது கிம் ஜாங் உன் அரசு.

அதன்படி, குற்றச்செயலில் ஈடுபடும் குழந்தைகளின் பெற்றோர் 6 மாதக் காலம் தொழிலாளர் முகாம்களில் வேலை பார்க்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கு முன் குற்றம் நிரூபிக்கப்பட்ட பெற்றோர் கடுமையாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ஆனால் இனி கருணை இல்லை, அதிபரின் கொள்களின்படி குழந்தைகளை வளர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா: படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை- கிம் ஜாங் உன் அரசு அதிரடி அறிவிப்பு
வட கொரியா: அதிபர் மகள் பெயரை யாரும் சூட்டக்கூடாது - புதிய தடை விதித்த கிம் ஜாங் உன் அரசு!

கலாச்சார சீர்கேடு

இப்படி மற்ற நாடுகளின் படங்களை பார்ப்பதனால், பாடல்கள் கேட்பதானால் அந்நிய நாட்டு கலாச்சாரம் வட கொரியா மக்களின் மனதில் வேரூன்றிவிடும், இதனால் மக்கள் அரசுக்கு எதிராக திரும்ப வாய்ப்பிருப்பதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா: படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை- கிம் ஜாங் உன் அரசு அதிரடி அறிவிப்பு
North Korea : 2வது முறையாக பொதுவெளியில் அதிபரின் மகள் - இவரது பெயர் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com