கூகுள்: அதிகாலை 3 மணிக்கு! 16.5 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்; ஒரே நிமிடத்தில் பறிபோன வேலை

ஜஸ்டின் இந்த நிறுவனத்திற்காக கடந்த 16.5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். திடீரென அதிகாலை 3 மணியளவில் இவரது அக்கவுன்ட் டீ ஆக்டிவேட் ஆனபோது தான் இவரது வேலை பறிபோனது தெரியவந்துள்ளது.
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சைTwitter
Published on

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில் 16.5 ஆண்டுகளாக பணியாற்றிய ஒருவருக்கு அதிகாலை 3 மணிக்கு வேலை பறிப்போயுள்ளது.

கடந்த ஆண்டு முதலே உலகம் முழுவதிலும் உள்ள பெரு நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதனால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தனது 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதில் மென்பொருள் பொறியியல் மேலாளர் ஆன ஜஸ்டின் மூர் என்பவரும் அடக்கம்.

ஜஸ்டின் இந்த நிறுவனத்திற்காக கடந்த 16.5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். திடீரென அதிகாலை 3 மணியளவில் இவரது அக்கவுன்ட் டீ ஆக்டிவேட் ஆனபோது தான் இவரது வேலை பறிபோனது தெரியவந்துள்ளது.

தனது லின்க்ட் இன் பக்கத்தில் தன் லே ஆஃப் குறித்து பதிவிட்டிருந்த ஜஸ்டின், கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் எப்படி நம்மை "தூக்கியெரியக் கூடிய பொருளாக" பார்க்கிறது எனவும் சொல்லியிருந்தார்

சுந்தர் பிச்சை
Meta, Twitter லே ஆஃப்: வேலை தருவதாக கூறிய Dream11 நிறுவனர் - நெட்டிசன்கள் ரியாக்ஷன் என்ன?
lay off
lay off Twitter

"பணிநீக்கம் செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் 12,000 பேரில் நானும் ஒருவன். தானியங்கி செயலி மூலம் எனது சேவை நிறுத்தப்பட்டது என்று அதிகாலை 3 மணிக்கு எனக்கு செய்தி வந்தது. அதன் பிறகு வேறெந்த தகவலும் அளிக்கப்படவில்லை" என்று பதிவிட்டிருந்தார் ஜஸ்டின்

கூகுளில் பணியாற்றிய நாட்கள் மிகவும் சிறந்த அனுபவத்தையே தனக்கு அளித்ததாகவும், அங்கு வேலைப் பார்த்ததில் தனக்கு கர்வம் இருந்ததாகவும் கூறிய ஜஸ்டின், வேலையும் நம் வாழ்க்கையும் எப்படி தனித் தனி விஷயங்கள் என்பதை புரிந்துகொண்டதாக கூறினார்.

பணிநீக்கத்திற்கு முழுப் பொறுப்பை தான் எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளார் சி இ ஓ சுந்தர் பிச்சை. உலகளவில் உள்ள கூகுள் நிறுவனங்களில் இந்த லே ஆஃப் அமல்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

லே ஆஃப் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நோடீஸ் பீரியட் ஆக 60 நாட்கள் கெடு வழங்கப்படுகிறது. இந்த நாட்களில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும், மேலும் அவர்கள் புதிய வேலையை தேடுவதற்கும் முழு ஆதரவு அளிக்கப்படும் என்று நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டின் போனஸ்கள், மற்றும் விடுமுறை நாட்களுக்கான ஊதியம் உள்ளிட்டவையும் வழங்கப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது

சுந்தர் பிச்சை
Meta: வேலைக்காக இந்தியாவில் இருந்து கனடா சென்ற நபர் - இரண்டே நாளில் லே ஆஃப் செய்த நிறுவனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com