துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : ஆயிரக்கணக்கானோர் பலி - தற்போதைய நிலை என்ன?

முதல் நிலநடுத்தின் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னரே துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : ஆயிரக்கணக்கானோர் பலி - தற்போதைய நிலை என்ன?
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : ஆயிரக்கணக்கானோர் பலி - தற்போதைய நிலை என்ன?Twitter
Published on

இன்று காலை துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்ட நில நடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

ரிக்டர் அளவு கோளில் 7.8 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தின் விளைவாக நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இதனால் துருக்கியில் 1300க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5000க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட நகரங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சிரியாவில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுத்தின் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னரே துருக்கி மற்றும் சிரியாவில் மீண்டும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : ஆயிரக்கணக்கானோர் பலி - தற்போதைய நிலை என்ன?
துருக்கி : பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவு - 100 பேர் பலி?

இரண்டு நிலநடுக்கங்களுக்கும் இடையிலான நேரம் வெறும் 12 மணிநேரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.

துருக்கியில் கடந்த 23 ஆண்டுகளில் பெரிய நில நடுக்கங்கள் எதுவும் நடைபெறவில்லை. 1999ம் ஆண்டி 7.6 அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

துருக்கி அதிபர் இந்த நிலநடுக்கம் குறித்து, 1939க்கு பிறகான மிகப் பெரிய நிலநடுக்கம் எனக் கூறியுள்ளார்.

சிரியாவில் 340 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : ஆயிரக்கணக்கானோர் பலி - தற்போதைய நிலை என்ன?
Japan Earthquake : 11 ஆண்டுகளுக்கு பிறகு நள்ளிரவில் நடந்த பயங்கர நிலநடுக்கம் - இருவர் பலி

இந்த நிலநடுக்கத்தில் இருந்து மக்களை மீட்க 45க்கும் மேற்பட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன என துருக்கி அதிபர் கூறியுள்ளார்.

மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. 9000 மக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒரே இடத்தில் அடுத்தடுத்த நிலநடுக்கம் நிகழ்ந்ததால் பாதிப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளன.

பல குடும்பங்கள் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கித் தவித்து வருகின்றனர். நவீன, உற்தியான இயந்திரங்களை பயன்படுத்துவதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : ஆயிரக்கணக்கானோர் பலி - தற்போதைய நிலை என்ன?
சுனாமி : ஜப்பான் முதல் இந்தோனேசியா வரை - உலகின் வரைபடத்தை மாற்றிய மோசமான 8 சுனாமிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com