விமான நிலையத்தில் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான விசித்திரமான காரணங்கள்

பாதுகாப்பின் அடிப்படையிலான இந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு வித்தியாசமான காரணத்திற்காக பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. அவற்றை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்
விமான நிலையத்தில் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான விசித்திரமான காரணங்கள்
விமான நிலையத்தில் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான விசித்திரமான காரணங்கள்canva

தினந்தோறும் மில்லியன் கணக்கான மக்கள் விமானத்தின் பயணிக்கின்றனர்.

விமானத்தில் பயணிப்பதற்கு என பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பாதுகாப்பின் அடிப்படையிலான இந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு வித்தியாசமான காரணத்திற்காக பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. அவற்றை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

மாறுவேடமிடுதல்

2019 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் வசிக்கும் 32 வயதான ஒருவர் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார். அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து வயதான நபராக நியூயார்க் நகரத்தை அடைய முயன்றார்.

அவரது தோற்றத்தில் ஏதோ தவறு இருப்பதாக பாதுகாப்புப் பணியாளர்கள் உணர்ந்த தருணத்தில் அவர் போலி பாஸ்போர்ட்டில் பயணிக்க முயன்றது தெரியவந்தது.

அவரது பாஸ்போர்ட் 81 வயது என இருந்தபோதில் அவரது இளமை தோல் அதனை காட்டிக்கொடுத்து. இதனால் அவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

நடிகரும் முன்னாள் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், யூரோ 10,000 (INR 8,98,228) மதிப்புள்ள Audemars Piguet கடிகாரத்தை அறிவிக்கத் தவறியதற்காக முனிச் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்று மணிநேர தாமதத்தை சந்தித்தார்.

ஒரு தொண்டு நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில் ஸ்வார்ஸ்னேக்கர் கடிகாரத்தை ஏலம் விட விரும்பினார் என்பது பின்னர் வெளிப்பட்டது.

குழந்தை கடத்தல் முயற்சி

43 வயதான அமெரிக்கப் பெண், பிலிப்பைன்ஸில், குழந்தையை கடத்த முயன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.

குழந்தையின் அத்தை எனக் கூறி, கடத்த முயன்ற அவருக்கு போதிய ஆதாரம் இல்லாததால் தடுத்து வைக்கப்பட்டு மனித கடத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

கப்பலில் பாம்புகள்

2011 ஆம் ஆண்டு மியாமி சர்வதேச விமான நிலையத்தில், ஏழு பாம்புகள் மற்றும் பல சிறிய ஆமைகளை கடத்த முயன்ற ஒருவர் பிடிபட்டார். ஒவ்வொரு பாம்பும் தனித்தனியாக உள்ளாடைகளால் மூடப்பட்டு, மனிதனின் கால்சட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதனால் தடுத்து நிறுத்தப்பட்டது, பயணி கைது செய்யப்பட்டார்.

விமான நிலையத்தில் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான விசித்திரமான காரணங்கள்
நாட்டிலேயே மிகச்சிறிய இந்திய விமான நிலையம் எது தெரியுமா? எங்கு இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com