கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பெண் 11 நாட்களுக்கு உயிருடன் இருந்தாரா? - திக் திக் நிகழ்வு

ரோசங்கேலா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு கல்லறைக்கு அருகில் வசிக்கும் மக்கள் விநோதமாக கூக்குரலைக் கேட்டுள்ளனர். அடிக்கடி கதவைத் தட்டுவது போன்ற சத்தமும் எழுந்ததால் ரோசங்கேலாவின் வீட்டில் தகவல் தெரிவித்துள்ளனர்.
கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பெண் 11 நாட்களுக்கு உயிருடன் இருந்தாரா? - திக் திக் நிகழ்வு
கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பெண் 11 நாட்களுக்கு உயிருடன் இருந்தாரா? - திக் திக் நிகழ்வுTwitter

பிரேசிலில் தவறுதலாக உயிருடன் புதைக்கப்பட்ட பெண் 11 நாட்கள் சவப்பெட்டியில் உயிருக்குப் போராடியதாக கூறப்படுகிறது.

ரோசங்கேலா அல்மெய்தா தாஸ் சண்டோஸ் என்ற 37 வயது பெண் புதைக்கப்பட்ட பிறகு அவரது உயிருக்காக போராடி கத்தியதாக கூறப்படுகிறது.

இரண்டு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்த ரோசங்கேலா "செப்டிக் ஷாக்" காரணமாக உயிரிழந்ததாக அவரது இறப்புச் சான்றிதழ் கூறுகின்றது.

மேலும் சிறுவயது முதல் வலிப்பு மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார். இறப்புக்கு ஒரு வாரம் முன்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார்.

ரோசங்கேலா
ரோசங்கேலா

ரோசங்கேலா கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு கல்லறைக்கு அருகில் வசிக்கும் மக்கள் விநோதமாக கூக்குரலைக் கேட்டுள்ளனர்.

அடிக்கடி கதவைத் தட்டுவது போன்ற சத்தமும் எழுந்ததால் ரோசங்கேலாவின் வீட்டில் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரோசங்கேலாவின் உறவினர்கள் கல்லறையை தோண்டி வெளியில் எடுக்க முடிவு செய்திருக்கின்றனர். சவப்பெட்டியை எடுத்து திறந்த போது அங்கிருந்த யாவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

ரோசங்கேலாவின் கையில் இரத்தக்கறை இருந்திருக்கிறது. அவர் உயிரைக் காப்பாற்ற சவப்பெட்டியின் உள்பக்கத்தைத் உடைக்க முற்பட்டதால் இரத்தம் வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

அவர் நகத்தைக் கொண்டு சவப்பெட்டியை திறக்க முயன்றதற்கு அடையாளமாக கீறல்கள் இருந்திருக்கின்றன. அவரது மூக்கு மற்றும் காதில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு விழுந்து கிடந்திருக்கிறது.

ரோசங்கேலாவின் உடலைத் தொட்ட ஒருவர் அவரது உடல் இன்னும் கதகதப்பாக இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். சவப்பெட்டியைத் திறக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

வீடியோவில் ஒருவர் ஆம்புலன்ஸை கூப்பிடுங்கள் எனக் கத்துவது கேட்கிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோசங்கேலா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மறுநாள் அவர் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com