அச்சம் தரும் 5 மர்ம புத்தகங்கள் : அதன் ரகசியங்களும் அமானுஷ்யங்களும் - அச்சமூட்டும் கதை

நாம் அறியாத, புரிந்து கொள்ள முடியாத, மர்மமான புத்தகங்களும் வரலாறு நெடுக இருந்து வந்திருக்கின்றன. இது போன்ற புத்தகங்கள் யாருக்கும் தெரியாத மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவற்றின் உள்ளடக்கம் மனிதக் கற்பனைக்கு அப்பாற்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளன.
அச்சம் தரும் 5 மர்ம புத்தகங்கள்
அச்சம் தரும் 5 மர்ம புத்தகங்கள்NIKOLA MILJKOVIC

சமூகவலைத்தளங்களின் காலத்தில் புத்தக வாசிப்பு என்பது வெகுவாக வளரவில்லை. எனினும் டிஜிட்டல் புத்தகங்களின் வரவு, வாசிப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருவதும் உண்மை.

பல புத்தகங்கள் உலக வரலாற்றைப் பாதித்திருக்கின்றன. மத நூல்களான பைபிள், குர்ஆன் போன்றவையும் அரசியல் நூலான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மார்க்சின் மூலதனம் போன்ற நூல்களும் உலக வரலாற்றை மாற்றியிருக்கின்றன.

Books
BooksPexels

ஆனால் இவை போக நாம் அறியாத, புரிந்து கொள்ள முடியாத, மர்மமான புத்தகங்களும் வரலாறு நெடுக இருந்து வந்திருக்கின்றன. இது போன்ற புத்தகங்கள் யாருக்கும் தெரியாத மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவற்றின் உள்ளடக்கம் மனிதக் கற்பனைக்கு அப்பாற்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளன.

இத்தகைய புத்தகங்கள் உலகறிந்த மொழிகள் அல்லாமல் ஒரு ரகசியக் குறியீட்டில் எழுதப்பட்டுள்ளன. இது வரலாற்று அறிஞர்களுக்கே சவால் விடும் புத்தகங்களாகும். இந்த நூல்களில் பல மறைந்தாலும் சில இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை வரலாற்று ஆசிரியர்கள், மறைநூல் வல்லுநர்கள் மற்றும் அமானுஷ்ய விஷயத்தை பின்பற்றுபவர்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. இவற்றில் பிரபலமான ஐந்து நூல்களைப் பார்ப்போம்.

Books
BooksPexels

1. வொய்னிச் கையெழுத்துப் பிரதி

இந்நூல் தெரியாத மொழியில் எழுதப்பட்ட மர்மமான புத்தகம். அறிஞர்கள் அதை இன்னும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். இந்த கையெழுத்துப் பிரதி 1912இல் வில்ஃபிரிட் வொய்னிச் என்ற போலந்து நாட்டின் பழங்கால புத்தக விற்பனையாளரால் வாங்கப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்டது. 250 பக்கங்கள் கொண்ட நூலில் விவரிக்க முடியாத குறியீடுகள் உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டதாக கூறப்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

15 அல்லது 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படும் நூலில் பல விலங்குகள், மக்கள், ஜோதிடம், ராசி சின்னங்கள் மூலிகைகள் மற்றும் வரைபட விளக்கங்கள் உள்ளன. இது இந்தோ ஐரோப்பிய மொழியில் அல்லாமல் ஒரு செமிடிக் மொழியில் எழுதப்பட்டதாக ஜெர்மன் அறிஞர் ரெய்னர் ஹன்னிக் என்பவர் கூறுகிறார். ஆனாலும் இந்த புத்தகம் இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது.

2. சோய்கா புத்தகம்

சோய்கா புத்தகம் என்பது 16 நூற்றாண்டில் லத்தீன் மொழியில் எழுதப்பட்ட புத்தகமாகும். இது “அல்டாரியா” என்றும் அழைக்கப்படுகிறது. இது மந்திரம், ஜோதிடம் மற்றும் பேய்களைப் பற்றியது. நூலின் ஆசிரியர் பற்றி தெரியவில்லை. இந்நூல் 1580களின் முற்பகுதியில் ஜான் டீ என்ற அறிஞரால் முதன்முதலில் வாங்கப்பட்டது. அவர் இராணி எலிசபெத் 1 இன் ஆலோசகராகப் பணிபுரிந்தார். அவர் தனது முழு வாழ்க்கையையும் புத்தகத்தின் இரகசியங்களைப் புரிந்து கொள்ள முயன்றார்.

இருப்பினும் அவரால் கூட புத்தகத்தின் கடைசி 36 பக்கங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 1609 இல் அவர் இறந்த பிறகு புத்தகம் தொலைந்து போனது. 1994இல் இந்நூல் இரண்டு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்று பிரிட்டிஷ் நூலகத்திலும் மற்றொன்று போட்லியன் நூலகத்திலும் இருக்கிறது.

இருப்பினும் சோய்கா புத்தகத்தின் மர்மம் இன்னும் நீடிக்கிறது. யார் இதை எழுதியது என்பது தெரியவில்லை. நூலில் உள்ள 36 அட்டவணைகளும், அவற்றின் மந்திர வார்த்தைகளுக்கும் என்ன பொருள் என்பது இன்றும் யாருக்கும் தெரியாது.

3. ரோஹோங்க் கோடெக்ஸ்

1838இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்நூலும் புரிந்து கொள்ள முடியாத மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. நூலை இடமிருந்து வலமாகவா இல்லை வலமிருந்து இடமாக படிக்க வேண்டுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்நூல் 450 பக்கங்கள் உள்ள கையெழுத்துப் பிரதியாகும். 1838 ஆம் ஆண்டில் ஹங்கேரியன் அறிவியல் அகாடமியால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. கையெழுத்துப் பிரதியில் போர்கள் மற்றும் பல்வேறு மதக்கருப்பொருள்கள் பற்றிய 90 கருத்துப்படங்கள் உள்ளன. மொழியியலாளர்கள் கடுமையாக முயன்றும் இந்நூலில் ஒரு வார்த்தையைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த கையெழுத்துப் பிரதியை எழுதப் பயன்பட்ட காகிதம் 16ஆம் நூற்றாண்டின் இத்தாலி நாட்டைச் சேர்ந்தது என்பது மட்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

4. போபோல் வுஹ்

இந்நூல் 1500களின் நடுப்பகுதியில் மாயன் மொழி ஒன்றில் எழுதப்பட்டது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகள் உருவாக்கம் குறித்து விளக்குகிறது.

பண்டைய மாயன் கலாச்சாரம் மற்றும் புராணங்களை விவரிக்கும் மாயா ஆவணம் என்றும் இது மக்களின் புத்தகம் என்றும் குறிப்பிடப்படுகிறது. நூலில் உலகின் உருவாக்கம், கடவுளின் செயல்கள், மக்களின் இடப்பெயர்வு எல்லாம் இடம்பெற்றிருக்கின்றன. 16ஆம் நூற்றாண்டில் இங்கு ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பு குடியேற்றம் வரை நூல் விவரிக்கிறது. இந்த புத்தகம் 1700களில் குவாத்தமாலாவில் பிரான்சிஸ்கோ ஜிமெனெஸ் என்ற பாதிரியாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

5. லெஸ் ப்ரொஃபெட்டீஸ் அல்லது குறைவான தீர்க்கதரிசனங்கள்

16ஆம் நூற்றாண்டில் மைக்கேல் டி நாஸ்ட்ராடாமஸ் என்ற பிரெஞ்சுக்காரர் எழுதிய தீர்க்க தரிசனங்கள் நிறைந்த புத்தகம் இது. இதில் அவர் எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பதை விவரித்திருக்கிறார். இந்நூல் முதன்முதலில் 1555 இல் வெளியிடப்பட்டது. அவரது மரணத்திற்கு பிறகு அச்சிடப்படவில்லை.

ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியனின் வெற்றிகள், பிரெஞ்சுப் புரட்சி, இரண்டாம் ஹென்றியின் மரணம், இலண்டனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து, 9/11 தாக்குதல்கள், கென்னடி படுகொலை போன்ற முக்கிய வரலாற்று நிகழ்வுகளை அவர் கணித்ததாக பலரும் நம்புகின்றனர். அறிஞர்களோ இவை உண்மையல்ல, அவரது கணிப்புகள் அனைத்தும் தவறான விளக்கங்கள் அல்லது தவறான மொழிபெயர்ப்புகளோடு மக்களிடையே பரவியிருக்கின்றன என்கிறார்கள்.

அச்சம் தரும் 5 மர்ம புத்தகங்கள்
சோடா வியாபாரி டூ 650 கோடி ரூபாய் ஐஸ் கிரீம் சாம்ராஜ்ஜியம் - வாடிலாலின் வியக்க வைக்கும் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com