பெத்தலகேம்: வரலாற்றில் முதல்முறையாக கிறிஸ்துமஸை தவிர்க்கும் இயேசு பிறந்த ஊரின் மக்கள்

"காசாவின் பாதிக்கப்படும் ஒவ்வொரு குழந்தையிலும் நாங்கள் கிறிஸ்துவைப் பார்க்கிறோம். துன்பப்படுவோருடனும் ஒடுக்கப்படுவோருடனும் கடவுள் இருக்கிறார்"
பெத்தலகேம்: வரலாற்றில் முதல்முறையாக கிறிஸ்துமஸை தவிர்க்கும் இயேசு பிறந்த ஊரின் மக்கள்
பெத்தலகேம்: வரலாற்றில் முதல்முறையாக கிறிஸ்துமஸை தவிர்க்கும் இயேசு பிறந்த ஊரின் மக்கள்Twitter

கிறித்துமஸ் கொண்டாட்டங்கள் இயேசு பிறந்த ஊரான பெத்தலகேமில் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் இருக்கும் பாலஸ்தீனிய மக்கள் காசாவின் துயரங்களில் பங்கெடுக்கும் பொருட்டு கிறிஸ்மஸை தவிர்க்கும் முடிவினை எடுத்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் காசா மக்களை தொடர்ந்து பெருந்துன்பங்களுக்கு ஆளாக்கி வருகிறது.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸை முன்னிட்டு பெத்தலகேமில் எந்த வித பொது நிகழ்வுகளும் இருக்காது. உலக பிரசித்திபெற்ற மாங்கெர் சதுக்கத்தில் கூட அலங்கார விளக்குகள் இருக்காது.

பெத்தலகேமின் லூத்தரன் கிறிஸ்மஸ் தேவாலயத்தில் குழந்தை இயேசு கிடத்தப்பட்டிரும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமாக அமைக்கப்படுவது போல மரியா, சூசையப்பர் இல்லாமல் ஆடு, ஒட்ட்டகங்கள் இல்லாமல், ஞானிகள் இல்லாமல் தேவதூதர் இல்லாமல் உடைந்த கட்டடங்களின் சிதைவுக்கு நடுவில் இயேசு உறங்குவது போல அமைக்கப்பட்டுள்ளது.

லூத்தரன் கிறிஸ்மஸ் தேவாலய பாதிரியார் முந்தெர் ஐஸ்சக், "இன்று கிறிஸ்து பிறந்தால் காசாவின் கட்டட சிதைவுகளுக்குள் தான் பிறந்திருப்பார்" எனக் கூறியுள்ளார். இஸ்ரேல் காசாவில் குண்டுவெடிப்பதை நிறுத்தாதவரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

பெத்தலகேம்: வரலாற்றில் முதல்முறையாக கிறிஸ்துமஸை தவிர்க்கும் இயேசு பிறந்த ஊரின் மக்கள்
Isreal - Hamas: குடியிருப்பு, மருத்துவமனை, முகாம்களில் தாக்குதல்! கசா மக்களின் நிலை என்ன?

மேலும், "காசாவின் பாதிக்கப்படும் ஒவ்வொரு குழந்தையிலும் நாங்கள் கிறிஸ்துவைப் பார்க்கிறோம். கிறிஸ்துமஸின் அர்த்தத்தையும் காசா மக்களுடன் நாங்கள் இருப்பதையும் வெளிப்படுத்துவதற்காக இந்த முடிவு, துன்பப்படுவோருடனும் ஒடுக்கப்படுவோருடனும் கடவுள் இருக்கிறார்" எனவும் பாதிரியார் தெரிவித்துள்ளார்.

இப்போது பெத்தலகேமில் வசிக்கும் யாரு இதற்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரமும் அலங்காரமும் இல்லாத கிறிஸ்துமஸை கழித்ததில்லை. ஆரவாரம் இல்லாமல் அதிகப்படியான அலங்காரம் இல்லாமல் ஆன்மிக வழியில் கிறிஸ்துமஸை நினைவுகூற உள்ளது பெத்தலகேம்.

பெத்தலகேம்: வரலாற்றில் முதல்முறையாக கிறிஸ்துமஸை தவிர்க்கும் இயேசு பிறந்த ஊரின் மக்கள்
இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற இடத்துக்கு கிறிஸ்தவர்களே செல்ல அஞ்சியது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com