29 ஆண்டுகள் நிர்வாண துறவறம்: தனித் தீவில் வாழ்ந்தவருக்கு நிகழ்ந்த அற்புதம், என்ன நடந்தது?

மசாஃபுமி நாகசாகிக்கு இப்போது 87 வயதாகிறது. இவர் தனது வாழ்நாளில் 29 ஆண்டுகளை தனியாக ஒரு தீவில் கழித்தார். இவர் அங்கு வாழ்ந்த போது யாருக்கு இவரைத் தெரியாது. "நிர்வாண துறவி" என்று அவரை கூறுகின்றனர்.
நாகசாகி
நாகசாகி Twitter
Published on

கூச்சல், குழப்பம், எரிச்சல், ஊழல், போராட்டம், வசைகள், மன அழுத்தமெல்லாம் நிறைந்த இந்த நாகரீக வழ்க்கையை விட்டு தனியாக எங்காவது சென்று வாழ்ந்துவிடலாம் என நினைக்காதவர்கள் குறைவே. ஆனால் நம்மால் நினைத்துக்கொள்ள மட்டுமே முடிந்த அந்த வாழ்வை தனது கைவசமாக்கியிருக்கிறார் ஜப்பாபைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.

மசாஃபுமி நாகசாகிக்கு இப்போது 87 வயதாகிறது. இவர் தனது வாழ்நாளில் 29 ஆண்டுகளை தனியாக ஒரு தீவில் கழித்தார். இவர் அங்கு வாழ்ந்த போது யாருக்கு இவரைத் தெரியாது. "நிர்வாண துறவி" என்று அவரை கூறுகின்றனர்.

அந்த தீவில் அடர்த்தியான தாவரங்கள் பல இருந்தன. அது ஒரு கிலோமீட்டர் நீள, அகலம் கொண்டது. அங்கு வாழ்ந்த ஒரே ஒரு மனிதர் நாகசாகி மட்டும் தான். ஏதோ ஹாலிவுட் படத்தின் கதைப் போல தோன்றலாம் ஆனால் அதுதான் உண்மை.

தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களை அங்கு கடத்திய நாகசாகி ஒரு நாள் அந்த தீவில் சுய நினைவின்றி கிடந்தார். அப்போது எதார்த்தமாக அந்த பக்கம் சென்ற மீன்பிடி படகில் இருந்த நபர்கள் ஒருவர், முதியவர் கடற்கரையில் கிடப்பதைப் பார்த்திருக்கின்றனர். பின்னர் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

நாகசாகி
நாகசாகி Twitter

இப்படியாக கடந்த 2018ம் ஆண்டு தனியாக வசித்த தீவிலிருந்து வெளியேறினார் நாகசாகி. மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவரது உடல் மிக மோசமான நிலையிலிருப்பதைக் கண்டறிந்தனர். அப்போது தான் அத்தனை ஆண்டுகாலம் ஒரு மனிதர் ஒரு தீவில் தனியாக வசித்து வந்தார் என்பது உலகுக்கு சொல்லப்பட்டது.

அதன் பின் 4 ஆண்டுகள் ஜப்பானில் ஒரு நகரத்தில் வாழ்ந்தார் நாகசாகி. எனினும் முதியவரின் உள்ளம், அவரது பழைய வீடான அந்த தீவையே நாடியது. அது அவருக்கு மீண்டும் கிடைத்தது.

நாகசாகி
நாகசாகி Twitter

நாகசாகி 1989ம் ஆண்டு, தனது ஐம்பதுகளில் நாகரீக உலகை விட்டு வெளியேற நினைத்தார். அது வரை ஒரு புகைப்படக் கலைஞராக இருந்த அவர் தனது உடைமைகளை விட்டுவிட்டு ஒரு காட்டு வாழ்க்கைக்கு தயாரானார்.

கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி Docastaway நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு குழு நாகசாகியை அவரது தீவுக்கு அழைத்துச் சென்றது. அந்த தீவில் அவர் கொஞ்ச நாள் தங்குவார் என அவர்கள் கூறியிருகின்றனர். இது குறித்து வெளியான வீடியோவில் நாகசாகி அந்த காட்டில் தான் வாழ்ந்த காலத்தில் நடந்த உணர்ச்சிகரமான தருணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com