2022: ஆசியாவிலேயே மோசமான நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு- கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிறதா?

2021 முடிவில் 74.33 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு 82.72 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு ஒரே ஆண்டில் இந்த அளவு அதிகரித்திருப்பது 2022ல் தான்.
2022: ஆசியாவிலேயே மோசமான நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு- கழுதை தேய்ந்து கட்டெரும்பாகிறதா?
2022: ஆசியாவிலேயே மோசமான நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு- கழுதை தேய்ந்து கட்டெரும்பாகிறதா? Twitter
Published on

2022ம் ஆண்டின் முடிவில் ஆசியாவிலேயே மோசமாக செயல்பட்ட கரன்சியாக இருக்கிறது இந்திய ரூபாய்.

இந்த ஆண்டில் அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 11.3% வீழ்ந்திருக்கிறது. கடந்த 2013ல் இருந்து மிக மோசமான வீழ்ச்சியாக அறியப்படுகிறது.

இதற்கு மற்றொரு காரணம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசு மேற்கொண்ட பணவியல் கொள்கைகள் டாலர் மதிப்பை வெகுவாக உயர்த்தியது தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

2021 முடிவில் 74.33 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு 82.72 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு ஒரே ஆண்டில் இந்த அளவு அதிகரித்திருப்பது 2022ல் தான்.

ரூபாய் மதிப்பின் இந்த மோசமான நிலைக்கு ரஷ்யா - உக்ரைன் போரால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

2023ம் ஆண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என சந்தை பங்கேற்பாளர்கள் (இந்திய நிறுவனங்களின் பங்குதாரர்கள்) நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளில் முதலீடு செய்வார்கள் எனவும் நம்பிகையுடன் இருக்கின்றனர்.

2022: ஆசியாவிலேயே மோசமான நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு- கழுதை தேய்ந்து கட்டெரும்பாகிறதா?
2023 புத்தாண்டு : பணம் சேமிக்க உறுதிமொழி எடுக்கிறீர்களா? - இதோ ஈஸி டிப்ஸ்!

ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை நீண்டு கொண்டே சென்றால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும். இதனால் ரூபாயின் மதிப்புக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.

2023ன் முதல் காலாண்டில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.50 - 83.50 என்ற நிலையில் இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

2022: ஆசியாவிலேயே மோசமான நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு- கழுதை தேய்ந்து கட்டெரும்பாகிறதா?
அச்சத்தில் சீனா : வேகமாக ஓடும் இந்தியா - என்ன நடக்கிறது?

இறுக்கமான பணவியல் கொள்கை, சில நாடுகளில் இருக்கும் பொருளாதார மந்தநிலை மற்றும் தற்போதைய புவிசார் அரசியல் மோதல்களால் பங்கு சந்தையின் திசை கணக்கிட முடியாததாக உள்ளது.

இந்த காரணிகளால் இந்திய பங்குகள் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்தால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பாதிப்படையும்.

ஒருவேளை சாதகமான நிலை தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தாலும் ஆசிய அளவில் சிறந்த இடத்தைப் பிடிப்பது கடினமானதாகவே இருக்கும்.

தென்கொரிய வேன் மற்றும் தாய் பாட் நாணயங்கள் 2023ல் சிறப்பாக செயலாற்றும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

2022: ஆசியாவிலேயே மோசமான நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு- கழுதை தேய்ந்து கட்டெரும்பாகிறதா?
”ஆடம்பர செலவுகள் வேண்டாம்!” - எச்சரிக்கும் பெசோஸ்; பொருளாதார மந்தநிலை உருவாகிறதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com