அனுஷ்கா சர்மா, அமிதாப் பச்சன் மீது மும்பை போலீஸ் நடவடிக்கை - என்ன நடந்தது?

இணையத்தில் மும்பை காவல்துறையிடம் அமிதாப் பச்சன் மீது புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அமிதாப் தான் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை என விளக்கமளித்துள்ளார்.
அனுஷ்கா சர்மா, அமிதாப் பச்சன் மீது மும்பை போலீஸ் நடவடிக்கை - என்ன நடந்தது?
அனுஷ்கா சர்மா, அமிதாப் பச்சன் மீது மும்பை போலீஸ் நடவடிக்கை - என்ன நடந்தது?Twitter

மும்பை காவல்துறை பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர்களுக்கு எதிரான புகார்களை பெற்று வருகிறது.  சமூக வலைத்தளங்களில்  இருவரும் ஹெல்மட் இல்லாமல் பைக்கில் பயணம் செய்யும் புகைப்படத்தைப் பதிவிட்டு மக்கள் காவல்துறையை டேக் செய்கின்றனர்.

புகார்களைத் தொடர்ந்து மும்பை காவல்துறையினர் அனுஷ்கா சர்மா மற்றும் அமிதாப் பச்சன் மீது நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர். 

திங்கள் கிழமை அமிதாப் பச்சன் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு செல்ல தனது ரசிகர் ஒருவரின் உதவியை நாடியுள்ளார். அனுஷ்கா சர்மா சாலை மறிக்கப்பட்டிருந்ததால் தனது பாடி கார்டுடன் பைக்கில் சென்றுள்ளார். 

இரண்டு பேருடைய புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. நட்சத்திரங்களும் சரி அவர்களை ஏற்றிச் சென்றவர்களும் சரி ஹெல்மட் அணிந்திருக்கவில்லை.

தான் ஒருவருடன் பைக் பயணம் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த அமிதாப் பச்சன், “சவாரிக்கு நன்றி… நீங்கள் யாரெனத் தெரியவில்லை… ஆனால் என்னை சரியான நேரத்துக்கு வேலைக்கு கூட்டிச் சென்றீர்கள்” என எழுதியிருந்தார்.

இருவரையும் சமூக ஊடகத்தில் புகார் செய்துள்ளனர். மும்பை காவல்துறை அமிதாப் மற்றும் அனுஷ்கா சர்மா பற்றிய பதிவுகளில் “இதை போக்குவரத்து கிளைக்கு பகிர்ந்துள்ளோம்” என ரிப்ளை செய்துள்ளனர்.

இந்த சிக்கலுக்கு தான் எந்த போக்குவரத்து விதிகளையும் மீறவில்லை என பதில் கொடுத்துள்ளார் அமிதாப் பச்சன். 

அனுஷ்கா சர்மா, அமிதாப் பச்சன் மீது மும்பை போலீஸ் நடவடிக்கை - என்ன நடந்தது?
அம்பானி முதல் அபிஷேக் பச்சன் வரை பயன்படுத்தும் கார்கள் என்ன? - அட்டகாச தகவல்

“நாங்கள் மும்பையில் உள்ள தெருவில் ஷூட்டிங் செய்துகொண்டிருந்தோம். நான் விளையாட்டாக படக்குழுவில் உள்ள ஒருவரின் பைக்கில் ஏறினேன். நாங்கள் ஒரு இன்ச் கூட நகரவில்லை. 

நான் உண்மையாக வேலைக்கு தாமதமாகும் போது இதுபோல செய்வதுண்டு. ஆனால் ஹெல்மட் அணிந்து அனைத்து சாலை விதிகளையும் பின்பற்றி தான் செய்வேன்.  

உங்களுக்கு கவலையை ஏற்படுத்தியதற்காகவும் போக்குவரத்து விதிகளை மீறும் தவறான கருத்தை ஏற்படுத்தியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள். நான் விதிகளை மீறவில்லை, லவ் யூ ஆல்” என விளக்கமளித்துள்ளார்.

அனுஷ்கா சர்மா, அமிதாப் பச்சன் மீது மும்பை போலீஸ் நடவடிக்கை - என்ன நடந்தது?
கிரண் பேடி முதல் அமிதாப் பச்சன் வரை : பிரபலங்கள் பகிர்ந்த போலிச் செய்திகள் | Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com