AR Rahman: "இந்தியா தவறான படங்களை ஆஸ்கருக்கு அனுப்புகிறது" இசைப்புயல் கருத்தால் பரபரப்பு

ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாகவும், தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணக் குறும்படமாகவும் ஆஸ்கர் விருதுகளை வென்றது. ஏ ஆர் ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் வெல்லும் இந்திய இசையமைப்பாளர் கீரவாணி தான்.
AR Rahman: "இந்தியா தவறான படங்களை ஆஸ்கருக்கு அனுப்புகிறது" இசைப்புயல் கருத்தால் பரபரப்பு
AR Rahman: "இந்தியா தவறான படங்களை ஆஸ்கருக்கு அனுப்புகிறது" இசைப்புயல் கருத்தால் பரபரப்புட்விட்டர்

ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து தவறான படங்களை அனுப்புவதாக கருத்து தெரிவித்திருகிறார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

சமீபத்தில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் இந்தியா சார்பிலும் படங்கள் அனுப்பப்பட்டன. ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலாகவும், தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணக் குறும்படமாகவும் ஆஸ்கர் விருதுகளை வென்றது.

ஏ ஆர் ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் வெல்லும் இந்திய இசையமைப்பாளர் கீரவாணி தான். ஆனால், ஒரு இந்திய படத்திற்காக அல்லது பாடலுக்காக ஆஸ்கர் வென்ற முதல் நபர் கீரவாணி. ஏ ஆர் ரஹ்மானின் ஆஸ்கர் ஒரு ஆங்கில படத்திற்கு வந்தது.

ஆர் ஆர் ஆர், தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் படங்களை தவிர, செல்லோ ஷோ என்ற குஜராத்தி படமும், ஆல் தட் ப்ரீத்தஸ் என்ற மற்றொரு ஆவணப்படமும் இந்தியா சார்பில் தேர்வாகியிருந்தது.

ஆல் தட் ப்ரீத்தஸ் விருதினை வெல்லும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா சார்பில் தவறான படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பிவைக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். இதனால் தான் இந்தியாவுக்கு அஸ்கர் விருதுகள் கிடைப்பதில்லை எனவும் கூறியிருக்கிரார்

மேற்கத்திய ரசிகர்களின் ரசனையை, மனதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கு ஏற்றார்போல படங்களை தேர்வு செய்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கவேண்டும் என அவர் கூறியிருக்கிறார்

AR Rahman: "இந்தியா தவறான படங்களை ஆஸ்கருக்கு அனுப்புகிறது" இசைப்புயல் கருத்தால் பரபரப்பு
AR Rahman : இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் குறித்த 10 சுவாரஸ்ய உண்மைகள்

“நமது படங்கள் ஆஸ்கருக்கு செல்கின்றன. ஆனால் விருது பெறுவதில்லை. தவறான படங்களை அனுப்பிகிறோம். அப்படி அனுப்பவேண்டாம் என்று எனக்கு தோன்றும்.

நாம், நம்மை மேற்கத்தியர்கள் இடத்தில் வைத்து சிந்தித்து பார்க்க்வேண்டும். எந்த மாதிரியான படங்களை, கதையை, கலையை நான் ரசிக்கிறேன் என்று அப்போது தெரியவரும். அவர்களின் கலையை ரசிக்க நான் என்னிடத்திலிருந்து பார்க்கவேண்டும்” என்றார்

இந்திய வயலின் கலைஞர் எல் சுப்ரமணியனுடனான நேர்காணல் ஒன்று ஏ ஆர் ரஹ்மானின் யூடியூப் சேனலில் சமீபத்தில் வெளியாந்து. அதில் தான் ரஹ்மான் இதனை கூறியிருந்தார். 1988ல் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் ஆஸ்கருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் விருதுக்கான இறுதிப் பட்டியலில் படம் இடம்பெறவில்லை

AR Rahman: "இந்தியா தவறான படங்களை ஆஸ்கருக்கு அனுப்புகிறது" இசைப்புயல் கருத்தால் பரபரப்பு
நாட்டு நாட்டு: எப்படி உருவானது இந்த ஆர் ஆர் ஆர் பாடல்? ஒரு சுவாரஸ்ய பின்னணி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com