பாக்கியலட்சுமி கைது : குழந்தைகளின் சாப்பாட்டில் விஷம் வைத்தது யார்?

இன்றைய எபிசோடில் உணவில் ஏதோ கலக்கப்பட்டு இருப்பதால் குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன் ஆகி இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதரவற்ற இல்லத்தின் நிர்வாகி போலீசுக்கு தகவல் சொல்கிறார்.
Baakiyalakshmi
BaakiyalakshmiTwitter
Published on

பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. ராதிகாவுக்கு பாக்கியா செய்து கொடுத்த உணவில் ஏதோ ஒவ்வாத பொருள் கலக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆதரவற்றோர் விடுதிக்கு ராதிகா கொண்டு போன உணவைச் சாப்பிட்ட குழந்தைகள் சில வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி தான் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் என்பது உறுதி.

Baakiyalakshmi
BaakiyalakshmiTwitter

கதைக்களம் பரபரப்பாக நகர்கிறது.

ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஒரு வேலை சாப்பாடு கொடுப்பதாக ராதிகா வாக்கு கொடுக்கிறார். அவர்களுக்கான உணவை ராதிகா பாக்யாவை சமைத்து தர சொல்கிறார். பாக்யா, பாக்யாவின் மாமியார், பணிப்பெண் ஆகியோர் இணைந்து உணவு தயாரிக்கின்றனர். இதனிடையே ராதிகா கோபியிடம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வரும்படி வற்புறுத்துகிறார்.

மேலும் டீச்சரை அறிமுகம் செய்து வைப்பதாக சொல்கிறார். பாக்யாவும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வருவார் என்பது தெரிந்ததும் கோபி அதிர்ச்சியில் உறைகிறார். ராதிகா கட்டாயப்படுத்தியதைத் தொடர்ந்து கோபி ஒப்புக்கொள்கிறார். வழக்கம் போல் பிளான் செய்து கோபி பாக்யாவை அங்கு வர விடாமல் செய்கிறார். ராதிகா உணவு பரிமாறுகிறார். சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் சில குழந்தைகள் மயக்கம் அடைகின்றனர்.

Baakiyalakshmi
சைலேந்திர பாபு : பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட தமிழ்நாடு டிஜிபி - நெகிழ்ச்சி சம்பவம்

இன்றைய எபிசோடில் உணவில் ஏதோ கலக்கப்பட்டு இருப்பதால் குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன் ஆகி இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதரவற்ற இல்லத்தின் நிர்வாகி போலீசுக்கு தகவல் சொல்கிறார். போலீஸ் வந்ததும் ராதிகா என்ன நடக்கிறது என்பது புரியாமல் தவிக்கிறார். கோபி போலீசிடம் பாக்யாவை மாட்டிவிடுகிறார். சமையல் செஞ்சி கொடுத்தவங்கள கூப்பிட்டு விசாரிங்க என்கிறார். இதற்கிடையே இந்த சம்பவம் நியூஸ் சேனல்களில் ஒளிபரப்பாகிறது.

பாக்யாவின் வீட்டில் அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். பாக்யா கைது செய்யப்படுகிறார். ராதிகாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார். பாக்யா ராதிகாவிடம் தனக்கு எதுவும் தெரியாது என்றும், வழக்கம் போல தான் சமைத்தேன் என்றும் சொல்லி அழுகிறார். ஆனால் ராதிகா பாக்யாவை பார்த்து முறைத்து விட்டு திரும்பி கொள்கிறார். எல்லா சூழலிலும் பாக்யாவை நம்பும் ராதிகா, இம்முறை நம்ப மறுக்கிறார்.

Baakiyalakshmi
BaakiyalakshmiTwitter

கோபி பாக்யா போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவார் என்பதை அறிந்து மயூ பாப்பாவுடன் எஸ்கேப் ஆகிவிடுகிறார். பாக்யா கைது செய்யப்பட்டது அறிந்த இனியா அழுகிறார். எழில் அனைவரையும் சமாதானப்படுத்தி விட்டு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள கிளம்புகிறார். நாளைய எபிசோடில் எழில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்து விடுவார். காரணம் ஒரு சில குழந்தைகள் மட்டும் தான் மயங்கி உள்ளனர். எனவே ஏதோ ஒரு உணவில் தான் ஏதோ தவறு நடந்திருக்கிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com