Bigg Boss 7: திடீரென வீட்டை விட்டு வெளியேறிய எழுத்தாளர் பவா செல்லதுறை - என்ன காரணம்?

”உடனே போயிடணும் என்ற மனநிலை தான் பிக் பாஸ் எனக்கு இருக்கு. என்னால இங்க இருக்கவே முடியல” என்று பவா கூறினார்.
Bigg Boss 7: திடீரென வீட்டை விட்டு வெளியேறிய எழுத்தாளர் பவா செல்லதுறை - என்ன காரணம்?
Bigg Boss 7: திடீரென வீட்டை விட்டு வெளியேறிய எழுத்தாளர் பவா செல்லதுறை - என்ன காரணம்?ட்விட்டர்
Published on

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து எழுத்தாளர் பவா செல்லதுறை வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் கன்ஃபெஷன் ரூமில், பிக் பாஸுடன் இது குறித்து உரையாடும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது.

இதில் போட்டியாளர்களாக ஐசு, ஜோவிகா, அக்ஷயா உதயகுமார், அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, விஷ்ணு விஜய், பாவா செல்லதுரை, விசித்ரா, சரவண விக்ரம், மாயா கிருஷ்ணன், மணி சந்திரா, விஷ்ணு தேவி, பூர்ணிமா ரவி, ரவீணா தாஹா , யுகேந்திரன் வாசுதேவன், கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்சன் ஆகிய 18 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

6 சீசன்களை கடந்து 7வது சீசனில், முதல் நாள் தொட்டே போட்டியாளர்களுக்கு இடையில் வாக்குவாதங்கள், மோதல்கள் இருந்தன.

முதல் வாரம் முடிவடைந்த நிலையில், அனன்யா எஸ் ராவ் எவிக்ட் ஆகி வெளியேறியுள்ளார். இந்நிலையில், எழுத்தாளர் பவா செல்லதுறையும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இவர் தானாக முன்வந்து வெளியேறுவதாக தகவல்கள் கூறுகின்றன.

எழுத்தாளரும், கவிஞரும், கதை சொல்லுபவருமான பவா செல்லதுறை, வீட்டிற்குள்ளேயும் தன் கதை சொல்லும் பாணிக்காக ரசிகர்களை பெற்றார்.

இந்த சீசனின் மற்றுமொரு போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, பவாவை தனது குருவின் இடத்தில் வைத்து பார்ப்பதாக கூறியிருந்தார்.

Bigg Boss 7: திடீரென வீட்டை விட்டு வெளியேறிய எழுத்தாளர் பவா செல்லதுறை - என்ன காரணம்?
பிக்பாஸ் வீட்டிலில் முதல் வாரத்திலேயே கவனம் பெறும் எழுத்தாளர் - யார் இந்த பவா செல்லதுரை?

முதல் வாரத்தில் அதிகமாக ஈர்க்காத போட்டியாளர்கள் பட்டியலில் பவா செல்லதுறையும் இருந்தார். இதனால் அவர் ஸ்மால் பாஸ் வீட்டில் ஒரு வார காலம் தங்கியிருந்தார்.

பெண்களை நன்றாக சமைக்கிறீர்கள் என்று சொல்லக்கூடாது, நான் என்ன ஆனாலும் எனது இயல்பில் இருந்து மாறமாட்டேன் போன்ற கருத்துகள், பவாவிற்கு ரசிகர்களை அதிகமாக்கியது.

இந்நிலையில், தன்னால் வீட்டிற்குள் தாக்குபிடிக்க முடியவில்லை என்று கூறி, தன்னை வெளியேற்றுமாறு பிக் பாஸிடம் பவா கேட்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், ”உடனே போயிடணும் என்ற மனநிலை தான் பிக் பாஸ் எனக்கு இருக்கு. என்னால இங்க இருக்கவே முடியல” என்று பவா கூறினார்.

எழுத்தாளர் கூறியதை பரிசீலித்த பிக் பாஸ், “உங்களோட உடல் மற்றும் மனநிலை இரண்டையும் கருத்தில் கொண்டு, உங்கள இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறேன்” என்றார்.

மேலும் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளித்திருக்கலாம் என்றும் பிக்பாஸ் தெரிவித்தார்.

பவா செல்லதுறை, தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதாக கூறியதால், பிக் பாஸ் இந்த முடிவை எடுத்ததாக அந்த வீடியோவின் மூலமாக தெரிகிறது.

Bigg Boss 7: திடீரென வீட்டை விட்டு வெளியேறிய எழுத்தாளர் பவா செல்லதுறை - என்ன காரணம்?
பிக் பாஸ் : சீசன் 6யில் 10 பெண் போட்டியாளர்களா? யார் யார் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com