பரியேரும் பெருமாள், குதிரைவால் வரிசையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் 5 -வது படம்

நகைச்சுவை மிளிரும் உணர்வுப்பூர்வமான குடும்பக்கதை இது என்கின்றனர். வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோரிடம் பணிபுரிந்த சுரேஷ் மாரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
Announcement
AnnouncementTwitter
Published on

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷனின் 5வது படத்தின் முதல் பார்வை நாளை வெளியாவதாக அப்டேட்ஸ் வந்திருக்கின்றன. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவாலைத் தொடர்ந்து இந்த படம் வெளியாகிறது.

கடைசியாக நீலம் புரொடக்‌ஷனில் வெளியான குதிரைவால் திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஞ்சித்தின் அடுத்த படமான நட்சத்திரங்கள் நகர்கிறது இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறது. விக்ரம் உடன் ரஞ்சித் பணியாற்றும் படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளும் முழு வீச்சில் நடைபெறுகின்றன. இப்படியாக ரஞ்சித் பரபரப்பாக இருக்கும் வேளையில் நீலம் ஐந்தாவது படம் தொடர்பான அறிவிப்பும் வந்திருக்கிறது.

இந்த படத்துக்கு ஜெ.பேபி எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் டிக்கிலேனா மாறன் ஆகியோர் நடிக்கின்றனர். நகைச்சுவை மிளிரும் உணர்வுப்பூர்வமான குடும்பக்கதை இது என்கின்றனர். வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோரிடம் பணிபுரிந்த சுரேஷ் மாரி இப்படத்தை இயக்கியுள்ளார்.

Announcement
Oscars 2022 : நகைச்சுவை நடிகரை தாக்கிய வில் ஸ்மித், என்ன நடந்தது ஆஸ்கர் மேடையில்?
பூஜை
பூஜைTwitter

சூர்யா 41

18 ஆண்டுகளுக்கு பிறகு பாலா உடன் இணைந்திருக்கிறார் சூர்யா. சூர்யாவின் கேரியரில் பாலா இயக்கிய நந்தா படம் மிக முக்கிய திருப்பமாக இருந்தது. நந்தாவுக்குப் பிறகு தான் சூர்யா ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாகப் பார்க்கப்பட்டார். அதே போல சூர்யாவின் ஆகச் சிறந்த நடிப்புத் திறனையும் வெளிக்கொண்டு வந்ததில் பாலாவின் பிதா மகன் படத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. அதன்பின் அவன் இவனில் கேமியோ மட்டும் செய்த சூர்யா இப்போது மீண்டும் பாலாவுடன் பணியாற்றுகிறார்.

Announcement
RRR : வாய்பிளக்க வைத்த முதல் நாள் வசூல், சாதனை படைத்த ராஜமௌலி - Box Office Collection

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com