Manobala மரணம்: இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோவால் கடுப்பான இணையம் - ஏன்?
Manobala மரணம்: இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோவால் கடுப்பான இணையம் - ஏன்?ட்விட்டர்

Manobala மரணம்: இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோவால் கடுப்பான இணையம் - ஏன்?

இசையமைப்பாளர் இளையராஜாவும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு சில வார்த்தைகள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. அதனை கேட்டவர்கள் இசையமைப்பாளரை விமர்சித்து வருகின்றனர்.
Published on

மனோபாலாவின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டிருந்த இரங்கல் வீடியோவால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், புகழ்பெற்ற நகைச்சுவை நடிகருமான மனோபாலா, கடந்த மே 3ஆம் தேதி காலமானார். கல்லீரல் பிரச்னையால் பல நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தவர், இரு தினங்களுக்கு முன் அவரது வீட்டில் இருந்தபோது உயிர் பிரிந்தது.

இயக்குநர் மனோபாலாவின் மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் விஜய் உள்பட பலரும் நேரில் இறுதிச் சடங்கிற்கு சென்றிருந்தனர்

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்ட ஒரு சில வார்த்தைகள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. அதனை கேட்டவர்கள் இசையமைப்பாளரை விமர்சித்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் இளையராஜா பேசியதாவது, “என்னிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்த நண்பரும், நடிகர், இயக்குனர் மனோபாலா மறைந்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். ஆரம்பத்தில் மனோபாலா பத்திரிகையாளராகவும், பின்னர் டைரக்டர் பாரதிராஜா அவர்களிடம் உதவியாளராகவும் இருந்தார்.

பின்னர் சொந்தமாக படங்களை இயக்க தொடங்கிய காலம் வரை, எல்லா காலத்திலும் என்னை சந்தித்து வந்தார்”

Manobala மரணம்: இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோவால் கடுப்பான இணையம் - ஏன்?
வெற்றிமாறன், தனுஷ், இளையராஜா : மெகா கூட்டணியில் உருவாகும் முதல் பாடல் - எப்போது ரிலீஸ்?

”என்னை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் பிரிட்ஜை தாண்டுகின்ற நேரத்தில், அந்த நேரத்தை சரியாக கணித்து என்னை காரில் சந்திக்க காத்திருந்த பல இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர். என்னிடம் ரெக்கார்டிங் தியேட்டரில் வந்து எல்லா விஷயங்களையும் பகிர்ந்துகொள்வார்” என்று கூறியிருந்தார்.

இந்த வாசகத்தை கேட்டு தான் பலரும் இளையராஜாவை விமர்சித்து வருகின்றனர். ஒரு மனிதர் இறந்ததற்கு இரங்கல் செய்தி சொல்லும் வீடியோவில் கூட தன் சொந்தப் புகழை பாடிக்கொள்ளாமல் இளையராஜாவால் இருக்க முடியவில்லை எனவும், இது ஆணவப் பேச்சு எனவும் சாடி வருகின்றனர்.

Manobala மரணம்: இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோவால் கடுப்பான இணையம் - ஏன்?
விடுதலை: ஆர்பரித்த ரசிகர்கள், மேடையில் கோபப்பட்ட இளையராஜா - என்ன பேசினார்?

இளையராஜா தமிழ் சினிமாவின் முன்னணி, மூத்த இசைக்கலைஞராக இருந்தாலும், அவர் மீது தொடர்ந்து இது போன்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு தான் வருகின்றன. சமீபத்திய நேர்காணல் ஒன்றில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜா மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இளையராஜா மெச்சூரிட்டி இல்லாதவர், மிகவும் மட்டமானவர் என்று ஜேம்ஸ் வசந்தன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Manobala மரணம்: இளையராஜா வெளியிட்ட இரங்கல் வீடியோவால் கடுப்பான இணையம் - ஏன்?
"இளையராஜாவுக்கு Maturity இல்ல, ரொம்ப மட்டமானவர்" - ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சை விமர்சனம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com