”வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் “ - காதல் பட நடிகர் சுகுமார் பகிர்ந்த பகீர் தகவல்

வடிவேலு என்னை சிறிது நேரம் இருக்க சொல்லி, "ஏன் நடிச்சா என்ன மாதிரிதா நடிப்பேன் என்று சொல்லி வரியாமே" என்று கேட்டார். நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை… ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதனால்தான் அப்படி நடித்தேன் அவ்வளவுதான். இனிமேல் உங்களைப்போல் நடிக்க மாட்டேன் என அவரிடம் கூறினேன்.
”வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் “ - காதல் பட நடிகர் பகிர்ந்த பகிர் தகவல்
”வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் “ - காதல் பட நடிகர் பகிர்ந்த பகிர் தகவல் Twitter

நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலுக்கு மாமன்னன் படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி – 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், காதல் படத்தில் பிரபலமான சுகுமார் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது சினிமா வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார் சுகுமார்.

குறிப்பாக அந்த வீடியோவில் நடிகர் வடிவேலுவால் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் அந்த வீடியோவில் பேசியதாவது,

நான் வடிவேலுவின் தீவிர ரசிகன். அவரது உடல்மொழியை அப்படியே செய்வது எனக்கு பிடிக்கும். அப்படி ஒருமுறை, ஒரு படத்தில் எனது குருநாதரான நடிகர் வடிவேலுவின் உடல்மொழியில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து.

அந்த படத்தில் நடித்ததற்கு பிறகு ஒருநாள் நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணியும், முத்துக்காளையும் வடிவேலு என்னைக் பார்க்க வேண்டும் என்று கூறியதாக சொல்லி வந்து அழைத்துச் சென்றனர். நானும் என் குருநாதரைக் நேரில் பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வத்தில் அவரை காண சென்றேன். அங்கு தனியறை ஒன்றில் வைத்து அவரை சந்தித்தேன்.

அப்போது அவர் என்னிடம், என்னைப்போலவே நடிக்கிறாய் என வெகுவாக பாராட்டினார். நானும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன்.

”வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் “ - காதல் பட நடிகர் பகிர்ந்த பகிர் தகவல்
மாமன்னன் தனபால்: வடிவேலு பாத்திரத்தின் நிஜக்கதை தெரியுமா?

பிறகு சிறிது நேரத்தில், நடிகர்கள் முத்துக்காளையும், போண்டாமணியும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். நானும் அவர்களோடு கிளம்ப தயாரான போது, வடிவேலு என்னை சிறிது நேரம் இருக்க சொல்லி, ஏன் நடுச்சா என்ன மாதிரிதா நடிப்பேன் என்று சொல்லி வரியாமே என்று கேட்டார். நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை… ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதனால்தான் அப்படி நடித்தேன் அவ்வளவுதான். இனிமேல் உங்களைப்போல் நடிக்க மாட்டேன் என அவரிடம் கூறினேன்.

நான் அப்படி சொல்லி முடிப்பதற்ற்குள்ளாக திடீரென, என் பின்னால் இருந்து சிலர் தாக்கத் தொடங்கினர். அப்போது என்மீது தாறுமாறாக அடிவிழுந்தது.

அவர்களிடம் கெஞ்சி அங்கிருந்து தப்பி வந்தேன். இவ்வாறு அவர் நடிகர் வடிவேலுவுடனான மோசமான அனுபவங்களை கூறியுள்ளார். தற்போது இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

”வடிவேலு என்னை ஆள் வைத்து அடித்தார் “ - காதல் பட நடிகர் பகிர்ந்த பகிர் தகவல்
தேவர் மகன் ’இசக்கி’ தான் மாமன்னன்- வடிவேலு கதாபாத்திரம் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com