நயன்தாரா - விக்னேஷ் சிவன் : வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றனரா? சட்டம் சொல்வது என்ன?

சட்ட நடைமுறைகளை பின்பற்றியே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Nayanthara Vignesh Sivan
Nayanthara Vignesh SivanTwitter
Published on

இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

திருமணம் முடிந்து 4 மாதத்தில் குழந்தை எப்படி பிறந்தது என பலரும் குழப்பத்தில் இருந்த நிலையில், வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் நயன்தாரா - விக்னேஷ் ஜோடி பல்வேறு நாடுகளில் இருந்து தங்களது தேனிலவு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நேற்று இன்ஸ்டாகிராமில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர்.

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் எப்படி? என்று சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில் நயன்தாராவுக்கு அந்த 2 குழந்தைகளும் பிறக்கவில்லை என்றும், வாடகை தாய் மூலம் பெற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன் - விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தைகள்

சட்ட நடைமுறைகளை பின்பற்றியே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் மற்றும் வாடகைத் தாய்மார்கள் உடல் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டும்.

அத்தகைய சான்றிதழ் மாவட்ட சுகாதார அதிகாரியால் வழங்கப்படும். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர்களும், குழந்தை நல மருத்துவர்களும் சான்றிதழ் வழங்குவதற்கு முன் பரிசோதனை செய்ய வேண்டும்.

Nayanthara Vignesh Sivan
மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி? விவாகரத்து முறிந்ததா?
Nayanthara Vignesh Shivan
Nayanthara Vignesh Shivan Twitter

தம்பதிகளுக்கும் விதிமுறைகள்

ஒரு வாடகைத் தாய் கர்ப்பத்திற்கு முன்பும் பின்பும் மொத்தம் 16 மாதங்களுக்கு காப்பீடு வைத்திருக்க வேண்டும். வாடகைத் தாயாகப் பரிந்துரைக்கப்படும் பெண்ணின் வயது 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதேபோல், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள தம்பதிகளுக்கும் விதிமுறைகள் உள்ளன. வாடகைத் தாய்க்கு ஏற்பாடு செய்து குழந்தையைப் பெற விரும்பும் தம்பதியர் அல்லது இருவரில் ஒருவர் குழந்தைப் பேறு பெறத் தகுதியற்றவர்களாக இருக்க வேண்டும்.

திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு பின் தம்பதிக்கு குழந்தை இல்லாவிட்டால் தான் சட்டப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடியும் என்று சுகாதாரத்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து 4 மாதங்கள்தான் ஆகிறது!

Nayanthara Vignesh Sivan
பெங்களூர் : லைட், மின்கட்டணம் இல்ல; இயற்கையோடு இயைந்த வீடு - அசத்தும் தம்பதி
Nayanthara - Vignesh Shivan
Nayanthara - Vignesh Shivan Twitter

வாடகைத் தாய் அனுமதி இல்லை

திருமணமாகாதவர்களுக்கு வாடகைத் தாய் அனுமதி இல்லை. அப்படி இருக்க, விக்கி நயன் தம்பதி குறைந்தது 10 மாதங்களுக்கு முன்பே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அது சட்டவிரோதமானது என்று கூறப்படுகிறது.

மேலும் வாடகைத் தாய் குறித்த முழுமையான விளக்கம் நயன் விக்கி தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com