Rashmika: "வெறுப்பை மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறேன்" - வைரலாகும் இன்ஸ்டா போஸ்ட்

நான் சொல்லாத விஷயங்களுக்காக என்னை கேலி செய்வது மனமுடைய செய்கிறது என்ற ராஷ்மிகா, தான் சொன்ன ஒன்றிரண்டு விஷயங்கள் தனக்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறினார்.
Rashmika mandana
Rashmika mandanaSita Ramam
Published on

இணையத்தில் இதுவரை தனக்கு அளவுக்கு அதிகமான வெறுப்பு தான் கிடைத்திருக்கிறது என்று மனம் திறந்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தன்னா.

நடிகை ராஷ்மிகா கன்னட திரைப்படங்களில் அறிமுகமானார். தெலுங்கில் அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அவரை மற்ற திரைத்துறைகளிலும் புகழடைய செய்தது. அதன் பிறகு, தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.

தொடக்கத்தில் அவரை க்யூட் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இது நாளடைவில் அவருக்கே எதிராக திரும்பியது. அவர் செய்யும் விஷயங்களை, அவரது நடிப்பை டிரால் செய்ய ஆரம்பித்தனர்.

புஷ்பா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவரை விட ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய சமந்தாவுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகாவை சிலர் டிரால் செய்தனர்.

இந்நிலையில், தான் எதிர்கொண்டு வரும் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதத்திலும், தற்போதைய மன நிலைக் குறித்தும் மனம் திறந்துள்ளார் ராஷ்மிகா.

அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "கடந்த சில நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக அல்லது வருடங்களாகவே சில விஷயங்கள் என்னை துன்புறுத்தி வருகிறது. அதை பற்றி பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்" என்றுக் கூறினார். ”நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன், இதை சில ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கவேண்டும்” என்ற அவர்,

Rashmika mandana
சமந்தா : அரியவகை சரும நோய் பாதிப்பு, சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளாரா நடிகை?
Rashmika Mandanna : Enjoys her vacation in Maldives | Visual Story
Rashmika Mandanna : Enjoys her vacation in Maldives | Visual StoryTwitter

"நான் என் சினிமா வாழ்க்கையை தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்புகளை சந்தித்துள்ளேன். நிறைய ட்ரால்களும், எதிர்மறையான விஷயங்களும் என்னை நோக்கி வந்துள்ளன" என எழுதியிருக்கிறார். நிச்சயமாக எல்லோரும் தன்னை விரும்ப வேண்டுமென நினைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

"என் மீது உங்கள் வெறுப்புகளை திணிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் இரவு பகல் பாராமல் என் வேலையை விரும்பி செய்துகொண்டிருக்கிறேன்" எனவும், அதை பார்த்து சந்தோஷப்படுவதற்கு ஒரு ரசிகர் கூட்டம் இருப்பதை பற்றி மட்டுமே அவர் சிந்திப்பதாகவும் தெரிவித்தார்.

"நான் என்னால் முடிந்தவரை அனைத்தையும் செய்து வருகிறேன். அதை கண்டு நான் பெருமையும் கொள்கிறேன்"
ராஷ்மிகா
Rashmika
RashmikaInstagram

எனினும் நான் சொல்லாத விஷயங்களுக்காக என்னை கேலி செய்வது மனமுடைய செய்கிறது என்ற ராஷ்மிகா, தான் சொன்ன ஒன்றிரண்டு விஷயங்களும் தனக்கு எதிராக திரும்பியுள்ளதாகவும் கூறினார்.

"நான் விமர்சனங்களை ஏற்கிறேன். ஏனென்றால் அவை தான் நான் முன்னேற கற்றுக்கொடுக்கும். ஆனால் எதற்காக இந்த மோசமான, எதிர்மறையான, வெறுப்பை உமிழும் செயல்கள்?"

இவ்வாறான விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருக்க அறிவுறுத்தியிருக்கிறார்கள், எனினும் அது எல்லை மீறி சென்றுவிட்டது. "நான் இதன் மூலம் யாரையும் வெல்ல நினைக்கவில்லை" என்ற ராஷ்மிகா, தொடர்ந்து தன்னை நோக்கி வரும் இந்த வெறுப்பை பார்த்து வட்டத்திற்குள் அடைந்துகொள்ள விரும்பவில்லை என்றும் கூறினார்.

தான் அனைவரையும் நேசிப்பதாக சொன்ன அவர், எப்போதும் எல்லோருடனும் அன்பாக இருக்கவேண்டும் எனக் கூறினார்.

Rashmika mandana
Samantha: Interviewவில் கண்ணீர்விட்டு அழுத நடிகை; இணையத்தில் வைரலாகும் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com