Ponniyin Selvan : பொன்னி நதி பாடலின் “ஈயாரி எசமாரி”-க்கு அர்த்தம் இதுதானா?

'பொன்னி நதி பாக்கணுமே' பாடலில் வழக்கமான வார்த்தைகள் ஓரளவு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள chorus பகுதிகள், (ஈயாரி எசமாரி) சற்று புலப்படும்படியாக இல்லை.
கார்த்தி
கார்த்திTwitter
Published on

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "பொன்னி நதி பாக்கணுமே" பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றிருந்தது. திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியான இந்த பாடல், வந்தியத்தேவன் பயணப்பாடல். கதையும் இந்த பாட்டிலே தான் துவங்கும். 

வழக்கமான திரைப்பட பாடலாசிரியர்கள் அல்லாமல், இம்முறை எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன், கபிலன், சிவா ஆனந்த், கிருத்திகா நெல்சன் ஆகியோர் பாடல்களை புனைந்துள்ளனர். 

கார்த்தி
பொன்னியின் செல்வன் பொன்னி நதி : தமிழில் 53 லட்சம் வியூஸ் - மற்ற மொழிகளில் எவ்வளவு?
பொன்னி நதி
பொன்னி நதி யூடியூப்

படத்தின் பெரும்பாலான பாடல்கள் எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இதுவே இவருக்கு திரைப்பட பாடலாசிரியராக முதல் படமும் கூட. 'பொன்னி நதி பாக்கணுமே' பாடலில் வழக்கமான வார்த்தைகள் ஓரளவு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதில் இடம்பெற்றுள்ள chorus பகுதிகள், (ஈயாரி எசமாரி) சற்று புலப்படும்படியாக இல்லை.

உன்னிப்பாக கவனித்த பின் வார்த்தைகள் தெரிந்தாலும், அதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. எனினும் அக்னி நட்சத்திரம் பாடலின் கோரஸ் போல (ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா), புரியாமல் இருந்தாலும் தனிச்சியாக இந்த கோரஸையும் முணுமுணுக்க வைத்தது பாடல். 

இந்நிலையில், முகநூல் பயனர் ரா ராஜகோபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த கோரஸ் பகுதிக்கான அர்த்தத்தை பகிர்ந்திருந்தார். அதில், தமிழில் ஒற்றை எழுத்துகளுக்கும் அர்த்தம் இருப்பது நாம் அறிந்ததே. ஆ என்பதன் பொருள் பசு, கோ என்றால் அரசன் போன்ற வார்த்தைகள் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன. அந்த வகையில், "ஈயாரி எச மாரி" வார்த்தைகளை பிரித்தால், ஈ-ஆரி-எச-மாரி ஒற்றை எழுத்துகளுக்கு பின்வரும் அர்த்தம் இருக்கிறது. 

"ஈ ஆரி எச மாரி என பிரித்தால், ஈ-வில், ஆரி -வீரன், எச - இசை, மாரி - மழை என பொருள்படும். அதாவது 'வில் வீரனின் இசை மழை' என்பதை தமிழ் ஒற்றை அர்த்ததை வைத்து பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் இவ்வாறு இயற்றியிருக்கிறார்" என்று ராஜகோபாலன் குறிப்பிட்டிருந்தார். கவிஞரின் ஆராய்ச்சி மற்றும் முயற்சியை பாராட்டி இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

கார்த்தி
Ponniyin Selvan : பொன்னி நதி பாடல் குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்ஸ் - ஒரு அடடா தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com